» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆசிரியர்கள் கண்டித்ததால் +1 மாணவர் தற்கொலை: மாணவர்கள் வகுப்புறக்கணிப்பு - ‍ சாலை மறியல்!

ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 10:57:34 AM (IST)

ஆசிரியர்கள் கண்டித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான 11-ஆம் வகுப்பு மாணவர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கீரன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் விக்டர் தாமஸ் - லென்சி தம்பதி. இவர்களது மகன் கவின் ஜெனில் (16). இவர் நாகர்கோவிலில் உள்ள எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் பெற்றோர் வெளியில் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் தனியாக இருந்த கவின் ஜெனில் திடீரெனத் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கூச்சலிட்ட பாட்டியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், மாணவனை மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மாணவனின் தாய் லென்சி பூதப்பாண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரில்: வகுப்பில் படித்த மாணவி ஒருவருடன் சிரித்துப் பேசியதற்காகப் பள்ளி ஆசிரியர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மகனைக் கடுமையாகக் கண்டித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட தீவிர மன உளைச்சல் காரணமாகவே தனது மகன் தற்கொலை செய்துகொண்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

மாணவன் உயிரிழந்த செய்தியையறிந்த சக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துச் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவனின் சாவுக்குக் காரணமான ஆசிரியர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்களும் வீதியில் இறங்கிப் போராடினர்.

காவல்துறையினரின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீசார் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


மக்கள் கருத்து

என்னAug 23, 2026 - 04:56:15 PM | Posted IP 172.7*****

ஆசிரியர் திட்டியதுக்கு எல்லாம் இப்படியா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory