» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆராய்வதா? தலைமைச் செயலாளரை பதவி நீக்க மார்க்சிஸ்ட் கோரிக்கை!

ஞாயிறு 23, ஆகஸ்ட் 2026 11:36:01 AM (IST)

shanmugamarpatt.jpg

அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்தப் போகிறீர்களா அல்லது இடதுசாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சியைத் தொடரப் போகிறீர்களா?" என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் கேள்வி எழுப்பினார்.

கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைச் சேகரிக்க உத்தரவிட்ட விவகாரத்தில், தலைமைச் செயலாளர் சாய் குமாரைப் பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.  திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் விவரங்களைச் சேகரித்து அனுப்ப உத்தரவிட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

தலைமைச் செயலாளர் சாய் குமார் நடத்திய கூட்டத்திற்குப் பிறகே, கல்லூரிகளில் போராட்டத்தில் ஈடுபடும் இடதுசாரி மாணவர்களைக் கண்காணிக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தலைமைச் செயலாளர் சாய் குமாரை உடனடியாகப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மாநிலச் செயலாளர் சண்முகம் பேசியதன் முக்கியக் கருத்துகள்: "மாணவர் அமைப்புகளும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டே செயல்படுகின்றன. ஜனநாயக ரீதியாகப் போராடும் உரிமை எங்களுக்கு உள்ளது. குறிப்பிட்ட ஒரு கட்சியையோ அமைப்பையோ கண்காணிக்கச் சொல்லும் உரிமை அதிகாரிகளுக்கு இல்லை."

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் உள்ளார்களா அல்லது அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசு உள்ளதா என்பதற்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும். இடதுசாரிகளின் ஆதரவோடுதான் இந்த அரசு நீடிக்கிறது. அதிகாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சியை நடத்தப் போகிறீர்களா அல்லது இடதுசாரிகளை வைத்துக்கொண்டு ஆட்சியைத் தொடரப் போகிறீர்களா?" என அவர் கேள்வி எழுப்பினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory