» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

யு19 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.7.5 கோடி ரொக்கப் பரிசு: பிசிசிஐ அறிவிப்பு

சனி 7, பிப்ரவரி 2026 3:43:39 PM (IST)



யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூ.7.5 கோடி ரொக்கப் பரிசு அறிவித்துள்ளது.

ஹராரே நகரில் நேற்று நடைபெற்ற யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 100 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி. இந்த தொடரின் வரலாற்றில் இந்திய அணி வெல்லும் ஆறாவது சாம்பியன்ஷிப் பட்டமாக இது அமைந்தது.

"யு19 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவின் இளையோர் அணியை எண்ணி ஒட்டுமொத்தமா தேசமும், பிசிசிஐ-யம் பெருமிதம் அடைகிறது. இந்த தொடரில் ஒரு போட்டியில் கூட இந்திய அணி தோல்வி பெறாமல் சாம்பியின் ஆகியுளளது. அதுவும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்திய விதம் அபாரம். அவர்களுக்கு பிசிசிஐ சார்பில் ரூ.7.5 கோடி பரிசு அறிவிக்கிறோம்” என பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைக்கியா தெரிவித்தார்.

இந்த தொடரில் 7 ஆட்டங்களில் விளையாடி இருந்தார் இந்தியாவின் 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி. மொத்தம் 259 பந்துகளில் 439 ரன்களை அவர் எடுத்திருந்தார். இதில் 41 பவுண்டரிகள் மற்றும் 30 சிக்ஸர்களை அவர் விளாசி இருந்தார். இறுதிப் போட்டியில் 175 ரன்கள் எடுத்து மிரட்டினார். இதன் மூலம் இந்த தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றார். இறுதிப் போட்டியிலும் ஆட்ட நாயகன் விருதை அவரே வென்றிருந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

டி-20 உலக கோப்பை கிரிக்கெட் 2026 அட்டவணை

திங்கள் 2, பிப்ரவரி 2026 11:04:12 AM (IST)

Sponsored Ads



Tirunelveli Business Directory