» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
ஒரே வங்கி கணக்கில் 4 வாரிசுதாரர்களை சேர்க்கலாம்: சட்டத்திருத்த மசோதா தாக்கல்!
சனி 10, ஆகஸ்ட் 2024 11:22:32 AM (IST)
ஒரே வங்கி கணக்கில் ஒரு வாரிசுதாரருக்கு பதிலாக, 4 வாரிசுதாரர்களை சேர்ப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, வங்கிகள் சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம், ரிசர்வ் வங்கி சட்டம் உள்பட 5 சட்டங்களில் திருத்தங்கள் செய்து, இம்மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. மசோதாவுக்கு கடந்த வாரம் மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
தற்போது, ஒரு வங்கி கணக்கில் ஒருவரை மட்டுமே வாரிசுதாரராக (நாமினி) நியமிக்க முடியும். இனிமேல், 4 வாரிசுதாரர்கள் வரை நியமிக்க வாடிக்கையாளருக்கு வாய்ப்பு அளிப்பது உள்ளிட்ட திருத்தங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களின் வசதிகளை பெருக்கவும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உரிமை கோரப்படாத லாப ஈவுத்தொகை, பங்குகள், வட்டி ஆகியவற்றை முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதியத்துக்கு மாற்ற மசோதா அனுமதிக்கிறது. ஆடிட்டர்களுக்கு ஊதியம் எவ்வளவு என்று தீர்மானிப்பதில் வங்கிகளுக்கு சுதந்திரம் அளிப்பதற்கும் மசோதா வகை செய்கிறது. கூட்டுறவு வங்கிகளின் இயக்குனர் பதவிக்காலம் 8 ஆண்டுகளுக்கு பதிலாக 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது.
வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு தரவுகள் அளிப்பதற்கான நாட்கள், மாதத்தின் 15-ந் தேதி மற்றும் கடைசி வேலைநாளாக மாற்றப்படுகின்றன.இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி எதிர்ப்பு தெரிவித்தார். கூட்டுறவு சங்கங்கள் தொடர்பாக சட்டம் இயற்றும் அதிகாரம், மாநில அரசுகளுக்குத்தான் இருப்பதாக அவர் கூறினார்.
அதற்கு பதில் அளித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்துக்கும், கூட்டுறவு சங்கங்களுக்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. எனவே, இந்த வழியில்தான் எந்த திருத்தத்தையும் கொண்டுவர வேண்டும். கூட்டுறவு சங்கங்களை சிறுமைப்படுத்தவில்லை. வங்கிச் சேவையை தவிர, அனைத்தையும் கூட்டுறவு சங்கங்கள் செய்கின்றன. வங்கி நடத்த உரிமம் பெற்ற கூட்டுறவு சங்கங்களுக்கு ஒரு விதிமுறை இருக்க வேண்டும் அல்லவா? அதற்குத்தான் நாங்கள் வழி காட்டி இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்ற கேள்வி
செவ்வாய் 14, அக்டோபர் 2025 5:38:15 PM (IST)

ஹரியானாவில் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை எதிரொலி: டிஜிபிக்கு கட்டாய விடுப்பு
செவ்வாய் 14, அக்டோபர் 2025 4:17:00 PM (IST)

பிரதமர் மோடியுடன் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு!
திங்கள் 13, அக்டோபர் 2025 5:40:03 PM (IST)

வருவாய் குறைந்ததால் மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி விருப்பம்!
திங்கள் 13, அக்டோபர் 2025 4:43:41 PM (IST)

கரூரில் 41 உயிரிழந்த உயிரிழந்த வழக்கில் சிபிஐ விசாரணை: உச்ச நீதிமன்றம் உத்தரவு!
திங்கள் 13, அக்டோபர் 2025 11:20:37 AM (IST)

தமிழகம், கேரளம் உட்பட 10 மாநிலத்தில் பணியாற்ற பெண்கள் விருப்பம்: ஆய்வில் தகவல்
சனி 11, அக்டோபர் 2025 4:49:09 PM (IST)
