» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
பயங்கரவாதிகளை இருந்த இடம் தெரியாமல் ஆக்கி விடுவோம்: பிரதமர் மோடி ஆவேசம்!
வியாழன் 24, ஏப்ரல் 2025 5:27:44 PM (IST)
"இந்தியாவின் தன்னம்பிக்கையை யாராலும் அசைக்க முடியாது. பயங்கரவாதிகளை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவோம்" என்று பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார்.

சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் வேட்டையாடப்படுவார்கள். தாக்குதல் நடத்தியவர்கள் யாரும் தப்ப முடியாது. கடினமான சூழலில் இந்தியாவுடன் துணை நின்ற நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தாக்குதல் நடத்தியவர்கள், சதி செய்தவர்களுக்கு கற்பனை செய்ய முடியாத அளவு தண்டனை வழங்கப்படும். இந்தியாவின் தன்னம்பிக்கையை யாராலும் அசைக்க முடியாது. பயங்கரவாதிகளை இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவோம்" என்றார்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கொடூர தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் 26 பேரை சுட்டுக்கொன்றனர். இதில் ஒருவர் வெளிநாட்டு பயணி, செய்யது அடில் உசைன் ஷா என்பவர் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி மற்ற அனைவரும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பஹல்காமுக்கு சுற்றுலா சென்றவர்கள். நாட்டையே அதிரவைத்த இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உடனடியாக காஷ்மீர் விரைந்தார்.
அங்கு அவர் முதல்வர் உமர் அப்துல்லாவுடன் ஆலோசனை நடத்தினார். சவுதி அரேபியாவில் இருந்த பிரதமர் மோடி தனது சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். உடனடியாக உயர் மட்ட குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இன்று அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனையை மத்திய அரசு நடத்த உள்ளது. இத்தகைய சூழலில்தான் பயங்கரவாதிகளை தப்ப விட மாட்டோம் என பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசுக் கட்டடங்களுக்கு பசுஞ்சாண பெயிண்டைப் பூச வேண்டும்: யோகி ஆதித்யநாத் உத்தரவு!
திங்கள் 5, மே 2025 5:36:07 PM (IST)

தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் : பவன் கல்யாண் வலியுறுத்தல்
திங்கள் 5, மே 2025 4:51:08 PM (IST)

சிலை கடத்தல் தொடர்பாக பொன்.மாணிக்கவேல் பேட்டி அளிக்க தடை : உச்ச நீதிமன்றம் உத்தரவு
திங்கள் 5, மே 2025 12:20:00 PM (IST)

கான்பூரில் 5 அடுக்கு மாடி கட்டடத்தில் தீ விபத்து; ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி
திங்கள் 5, மே 2025 11:57:37 AM (IST)

இந்தியாவைத் தாக்கத் துணிபவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்போம் : ராஜ்நாத் சிங்
ஞாயிறு 4, மே 2025 9:19:55 PM (IST)

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு தடை : மத்திய அரசு உத்தரவு
சனி 3, மே 2025 5:51:36 PM (IST)

maniApr 25, 2025 - 05:30:06 PM | Posted IP 104.2*****