» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரளத்தில் அதிர்ச்சி : மாணவர்களுக்குப் போதைப் பொருள் விற்ற 3 பெண் ஆசிரியைகள் கைது!
புதன் 29, ஜூலை 2026 11:01:41 AM (IST)

கோழிக்கோட்டில் பள்ளி வளாகத்தில் மாணவர்களைக் குறிவைத்து ரகசியமாகப் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பெண் ஆசிரியர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரா அருகே பேராம்பிராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பணிபுரியும் பெண் ஆசிரியைகள், பள்ளி வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை செய்வதாகக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து, கோழிக்கோடு மாநகரக் காவல் ஆணையரின் உத்தரவின் பேரில், மாநிலத்தில் போதைப்பொருளுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் ‘ஆபரேஷன் துபான்’ சிறப்புத் திட்டத்தின் கீழ் பேராம்பிரா காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
காவல்துறையின் விசாரணையில், மருதோம்கரா பகுதியைச் சேர்ந்த கீர்த்தனா என்ற ஆசிரியைக்குச் சர்வதேசப் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர் இடைத்தரகராகச் செயல்பட்டு, பள்ளி மாணவர்களைக் குறி வைத்துப் போதைப்பொருட்களை விநியோகம் செய்து வந்துள்ளார்.
இதையடுத்து ஆசிரியை கீர்த்தனாவைக் கைது செய்த காவல்துறையினர், அவரைத் தனிப்படை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரது வங்கிச் கணக்கு பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தபோது, அதே பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரியும் காவியா என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்களைத் தொடர்ந்து, இக்கடத்தல் நெட்வொர்க்கில் தொடர்புடைய குற்றோத்து பகுதியைச் சேர்ந்த நிஷ்மா (30) என்ற மற்றொரு ஆசிரியையையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர் நேரடியாகப் போதைப்பொருளை விநியோகிக்காமல், கூகுள் பே உள்ளிட்ட ஆன்லைன் மூலம் பணத்தைப் பெற்றுக் கொண்டு, போதைப்பொருள் இருக்கும் இடத்தின் கூகுள் மேப் லொகேஷனை அனுப்பி நூதன முறையில் விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இவ்வழக்கில் இதுவரை மொத்தம் 3 பெண் ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மேலும் சில ஆசிரியர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியாவில் புழக்கத்திற்கு வருகிறது பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்: காகித நோட்டுகள் செல்லுமா?
செவ்வாய் 28, ஜூலை 2026 5:43:22 PM (IST)

நீட் போராட்டம்: மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கூடாது - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
செவ்வாய் 28, ஜூலை 2026 5:14:11 PM (IST)

கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்: முதல்வர் விஜய்க்கு கேரள முதல்வர் சதீசன் கடிதம்!
செவ்வாய் 28, ஜூலை 2026 4:54:10 PM (IST)

ராகுல் காந்தி வெளிநாட்டுச் சக்திகளின் ஊதுகுழல்: பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கடும் தாக்கு!
செவ்வாய் 28, ஜூலை 2026 10:54:59 AM (IST)

மேகதாது அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை: மத்திய அமைச்சர் சொல்கிறார்!
செவ்வாய் 28, ஜூலை 2026 10:26:08 AM (IST)

டெல்லியில் மாணவர்கள் மீது தடியடி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கடும் கண்டனம்!
திங்கள் 27, ஜூலை 2026 12:28:52 PM (IST)


