» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மகாராஷ்டிராவில் பயங்கரம்: 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு!

வெள்ளி 31, ஜூலை 2026 12:36:48 PM (IST)

BuildingCollapse.jpg

மகாராஷ்டிராவில் 4 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டியில் 48 வீடுகளைக் கொண்ட 4 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது. இக்கட்டிடத்தில் நேற்றிரவு சுமார் 11:30 மணியளவில் திடீரென ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் மக்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறிய நிலையில், அடுத்த சில நிமிடங்களில் கட்டிடத்தின் மற்றொரு பகுதியும் முழுமையாக இடிந்து விழுந்து தரைமட்டமானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF), தானே மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை காயமடைந்த சிறுவன் ஒருவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
நகராட்சி நிர்வாகம் விளக்கம்:

இச்சம்பவம் குறித்து பிவாண்டி நகராட்சி நிர்வாகத் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்: இந்த அடுக்குமாடி குடியிருப்பு மிகவும் பலவீனமாக இருந்ததால், இதனை ஆபத்தான வசிப்பிடம் என வரையறுத்து நகராட்சி நிர்வாகம் சார்பாக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

நேற்றிரவு கட்டிடத்தில் விரிசல் விழுவதாகத் தகவல் கிடைத்ததும், நகராட்சி துணைக் ஆணையர் அரவிந்த் கோகரே தலைமையிலான குழுவினர் உடனடியாகச் சென்று வீடு வீடாகச் சென்று குடியிருப்பாளர்களை வெளியேற்றினர். பெரும்பாலான குடும்பங்கள் ஏற்கனவே காலியான நிலையிலும், மீதமிருந்த மக்களையும் அதிகாரிகள் விரைந்து வெளியேற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

நகராட்சி எச்சரிக்கையையும் மீறி கட்டிடத்தில் சட்டவிரோதமாக மராமத்துப் பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மற்றும் வெளியேறத் தவறியவர்கள் என மொத்தம் 9 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என்பதால் தொடர்ந்து அங்கே தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory