» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள்!

புதன் 29, ஜூலை 2026 5:01:11 PM (IST)

தமிழகத்திற்குத் தினமும் 3,500 கனஅடி வீதம் காவிரி நீரைத் திறந்து விடுமாறு காவிரி நீர் ஒழுங்குமுறைக்குழு உத்தரவிட்டுள்ள நிலையில், "ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வழங்கக் கூடாது" என வலியுறுத்திக் கர்நாடகாவில் கன்னட அமைப்புகளும், விவசாயச் சங்கங்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

தமிழகத்திற்கு இன்று முதல் அடுத்த 15 நாட்களுக்குத் தினமும் 3,500 கனஅடி காவிரி நீரைத் திறந்து விட வேண்டும் எனக் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டுள்ளது. இந்நடவடிக்கைக்குக் கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. இவ்வுத்தரவை எதிர்த்துக் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் மேல்முறையீடு செய்யப்படும் எனக் கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் கன்னட அமைப்பினர் சட்டை அணியாமலும், கைகளில் காலி குடங்களை ஏந்தியபடியும் அரைநிர்வாணப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்கக் கூடாது என முழக்கமிட்ட அவர்களைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்தனர்.

மைசூரில் விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அங்கிருந்த போராட்டக்காரர்களையும் காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர். மண்டியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் கர்நாடக எல்லைப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory