» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வயநாடு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள்: ஆக்ஸ்போர்டு கல்வி குழுமம் வழங்கல்!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 4:47:18 PM (IST)

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழும பள்ளிகள் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த மாதம் 30ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கட்டிடங்கள் நிலத்தில் புதைந்து 400 க்கு மேற்பட்டவர்கள் இறந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த நிலச்சரிவு காரணமாக மூன்று கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்கள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவிடும் வகையில் தென்காசி ஆக்ஸ்போர்டு கல்வி குழுமத்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி சார்பில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், உடைகள் உள்ளிட்டவைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி ஆகியோர் முன்னிலையில் கேரள மாநிலம் வயநாடு பகுதிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கு: சுர்ஜித் தாயாரை கைது செய்ய பிடிவாரண்ட்!
சனி 15, நவம்பர் 2025 12:44:52 PM (IST)

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கோலாகலம் : திரளானோர் தரிசனம்!
சனி 15, நவம்பர் 2025 11:51:49 AM (IST)

கொலை முயற்சி, வழிப்பறியில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது!
வெள்ளி 14, நவம்பர் 2025 5:31:34 PM (IST)

கூத்தன்குழியில் நவ.21ல் கடலம்மா மாநாடு : சீமான் அறிவிப்பு
வியாழன் 13, நவம்பர் 2025 4:29:46 PM (IST)

தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா தேரோட்டம் கோலாகலம்
வியாழன் 13, நவம்பர் 2025 12:44:11 PM (IST)

மதுவில் விஷம் கலந்து கொடுத்து பள்ளி ஆசிரியர் கொலை : பெண் உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை
புதன் 12, நவம்பர் 2025 5:50:21 PM (IST)




