» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வயநாடு பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள்: ஆக்ஸ்போர்டு கல்வி குழுமம் வழங்கல்!
திங்கள் 12, ஆகஸ்ட் 2024 4:47:18 PM (IST)

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு கல்வி குழும பள்ளிகள் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த மாதம் 30ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கட்டிடங்கள் நிலத்தில் புதைந்து 400 க்கு மேற்பட்டவர்கள் இறந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். இந்த நிலச்சரிவு காரணமாக மூன்று கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்கள் உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவிடும் வகையில் தென்காசி ஆக்ஸ்போர்டு கல்வி குழுமத்தைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆக்ஸ்போர்டு பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி சார்பில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், உடைகள் உள்ளிட்டவைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்ளின் பால் சுசி ஆகியோர் முன்னிலையில் கேரள மாநிலம் வயநாடு பகுதிக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)

நெல்லையில் வீடு புகுந்து இளம்பெண் பலாத்காரம் - கொத்தனார் கைது!
செவ்வாய் 12, மே 2026 8:42:37 AM (IST)

விஜய் முதல்வராவதில் இழுபறி நீடிப்பால் விரக்தி: தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி
சனி 9, மே 2026 3:10:10 PM (IST)

கோடை மழையால் குற்றாலம் ஐந்தருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
சனி 9, மே 2026 9:00:15 AM (IST)

பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு: மே 31-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியர் உத்தரவு!
வெள்ளி 8, மே 2026 4:51:54 PM (IST)

திருநெல்வேலி நூலகத்தில் நூல் திறனாய்வு விழா
வெள்ளி 8, மே 2026 12:52:25 PM (IST)


