» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டு 50 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
புதன் 13, மே 2026 4:16:28 PM (IST)
திருநெல்வேலி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 50 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போக்சோ சட்டத்தின் கீழ் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நாங்குநேரி வட்டம், கோவைகுளம் பகுதியைச் சேர்ந்த இசக்கிபாண்டி (26) மற்றும் முப்பிடாதி (30) ஆகிய இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். இவர்களின் குற்றப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, அவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க இன்ஸ்பெக்டர் சுதா பரிந்துரை செய்தார்.
அதேபோல், பாப்பாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சி, அடிதடி மற்றும் மிரட்டல் வழக்குகளில் தொடர்புடைய சேரன்மகாதேவி வட்டம், நந்தன்தட்டை பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (50) என்பவரும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க இன்ஸ்பெக்டர் பரத்லிங்கம் பரிந்துரை செய்தார்.
காவல் ஆய்வாளர்களின் பரிந்துரையை ஏற்று, மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் மாவட்ட ஆட்சியர் சுகுமாரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதனைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இந்த 3 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, இதற்கான ஆணை நேற்று சிறையில் வழங்கப்பட்டு, 3 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 50 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சொரிமுத்து அய்யனார் கோயிலிலை மேம்படுத்த மாஸ்டர் பிளான்: அமைச்சர் ரமேஷ் ஆய்வு!
சனி 27, ஜூன் 2026 5:44:59 PM (IST)
_1782541937.jpg)
தமிழகத்தின் 6 தொகுதி இடைத்தேர்தலிலும் களம் காண்கிறது நாதக: அம்பையில் சீமான் போட்டி!
சனி 27, ஜூன் 2026 12:02:22 PM (IST)

விவசாயக் கடனாக ரூ.3.68 கோடி விநியோகம்: விவசாயிகள் கூட்டத்தில் ஆட்சியர் தகவல்!
வியாழன் 25, ஜூன் 2026 5:33:32 PM (IST)

கங்கைகொண்டான் பகுதியில் வளர்ச்சிப் பணிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் ஆய்வு
புதன் 24, ஜூன் 2026 8:31:52 PM (IST)

கத்தார் எரிவாயு ஆலை வெடிவிபத்து: நெல்லை மாவட்ட வாலிபர்கள் 3 பேர் பரிதாப பலி!
புதன் 24, ஜூன் 2026 7:31:35 AM (IST)

காவல் நிலையம் முன்பு தச்சுத் தொழிலாளி தீக்குளிப்பு: நெல்லை அருகே பரபரப்பு!
செவ்வாய் 23, ஜூன் 2026 8:42:13 AM (IST)


