» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் 3 வயது சிறுவன் கொடூர கொலை : எதிர்வீட்டு பெண் வெறிச்செயல்!
திங்கள் 9, செப்டம்பர் 2024 3:52:02 PM (IST)

நெல்லையில் முன் விரோதத்தால் 3 வயது சிறுவனை எதிர்வீட்டு பெண் கொலை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள ஆத்துகுறிச்சி கீழத் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். கொத்தனார் கையாளாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரம்யா. இன்று காலை தனது 3 வயது பையன் சஞ்சய் யுடன் தெருவில் பைப்பில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். காலை 9.15 மணிக்கு சிறுவனை அங்கன்வாடிக்கு அழைத்துச் செல்ல தேடிய போது காணவில்லை. உடனே அக்கம் பக்கத்தில் உள்ள வீடு மற்றும் தண்ணீர் தொட்டிகளில் தேடி உள்ளனர்.
மேலும், ராதாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு உடனே விரைந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். எதிர் வீட்டைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி தங்கம் தன் குழந்தையை கடத்தி வைத்து இருக்கலாம் என்று போலீசாரிடம் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் தங்கம் வீட்டிற்குள் சென்று சிறுவனை தேடியபோது வீட்டிலிருந்த வாஷிங் மிஷினில் சாக்கு பையில் போட்டு கட்டி வைத்திருந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.
இதனைத் தொடர்ந்து போலீசார் தங்கத்தை பிடித்த போது அவர் போலீசாரிடமிருந்து தப்பி செல்ல முயற்சி செய்தார். உடனே போலீசார் அவரை லாபகமாக பிடித்து ராதாபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில், "தனது மகன் விபத்தில் இறந்ததற்கு எதிர்வீட்டு குடும்பம் தான் செய்வினை செய்ததாக நினைத்து, அதற்குப் பழி வாங்கும் விதமாகவே 3 வயது சிறுவனை கொலை செய்துள்ளதாகப் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 3 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை: கொத்தனார் போக்சோ சட்டத்தில் கைது
திங்கள் 16, மார்ச் 2026 8:35:34 AM (IST)

ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து தனியார் நிறுவன மேலாளரிடம் நகை, பணம் பறிப்பு: 2பேர் கைது!
திங்கள் 16, மார்ச் 2026 8:33:28 AM (IST)

மனைவியை வெட்டிக்கொலை செய்த கணவர்: நெல்லை பேருந்து நிலையத்தில் பயங்கரம்!
ஞாயிறு 15, மார்ச் 2026 2:07:23 PM (IST)

தொழிலதிபரிடம் ரூ.25 கோடி மோசடி : நெல்லை திமுக கவுன்சிலரின் கணவர் கைது!
ஞாயிறு 15, மார்ச் 2026 9:47:30 AM (IST)

பாரத்நெட் திட்டத்தில் தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு: நிதி தகுதி தளர்வு - ஆட்சியர் தகவல்!
சனி 14, மார்ச் 2026 5:38:31 PM (IST)

சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 10:59:20 AM (IST)

