» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஏழுமலையான் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு: சங்கரன்கோவிலை சேர்ந்தவர் கைது
புதன் 27, நவம்பர் 2024 8:28:22 AM (IST)
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் பணம் திருடிய சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியல்களில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி ஒருவர் உண்டியல் காணிக்கை பணத்தை திருடும் காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்து அந்தப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் பிற்பகல் 2 மணியளவில் மர்ம நபர் ஒருவர் உண்டியல் பணத்தை திருடியது தெரிய வந்தது.
அதன்பேரில் ஒருவரை பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தமிழ்நாடு மாநிலம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த வேணுலிங்கம் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் உண்டியலில் பணம் திருடியதை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவரிடமிருந்து ரூ.15 ஆயிரத்தை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருது : ஆட்சியர் இரா.சுகுமார் வழங்கினார்
சனி 14, மார்ச் 2026 10:59:20 AM (IST)

நெல்லையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை : தாயின் 2-வது கணவர் போக்சோவில் கைது!
சனி 14, மார்ச் 2026 8:43:47 AM (IST)

வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, தேர்தல் கூட்டங்கள் : அரசியல் கட்சிகளுடன் ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 13, மார்ச் 2026 5:41:13 PM (IST)

குரூப் 2 முதன்மை தேர்வுக்கு 9 மணிக்கு மேல் வந்தால் அனுமதி கிடையாது: ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 13, மார்ச் 2026 12:53:27 PM (IST)

இளம்பெண் தலை துண்டித்து கொடூர கொலை: நடத்தை சந்தேகத்தால் கணவர் வெறிச்செயல்!
வெள்ளி 13, மார்ச் 2026 8:32:53 AM (IST)

நெல்லையில் 3 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை: போக்சோ குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை!
வியாழன் 12, மார்ச் 2026 8:30:53 PM (IST)

