» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஏழுமலையான் கோவிலில் உண்டியல் பணம் திருட்டு: சங்கரன்கோவிலை சேர்ந்தவர் கைது
புதன் 27, நவம்பர் 2024 8:28:22 AM (IST)
திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியலில் பணம் திருடிய சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியல்களில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி ஒருவர் உண்டியல் காணிக்கை பணத்தை திருடும் காட்சி பதிவாகி இருந்தது. இதுகுறித்து அந்தப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் பிற்பகல் 2 மணியளவில் மர்ம நபர் ஒருவர் உண்டியல் பணத்தை திருடியது தெரிய வந்தது.
அதன்பேரில் ஒருவரை பாதுகாப்பு படையினர் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் தமிழ்நாடு மாநிலம் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த வேணுலிங்கம் என்பது தெரிய வந்தது. மேலும் அவர் உண்டியலில் பணம் திருடியதை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து அவரிடமிருந்து ரூ.15 ஆயிரத்தை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாமில் 5300 பேருக்கு பணிநியமன ஆணைகள் : சபாநாயகர், அமைச்சர்கள் வழங்கினர்!
சனி 5, ஜூலை 2025 5:44:29 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 132 மையங்களில் 36,011 பேர் குரூப் 4 தேர்வு தேர்வு எழுதுகிறார்கள்!
வெள்ளி 4, ஜூலை 2025 5:51:49 PM (IST)

தொழில் முனைவோர் மேம்பாடு: இன்டர்ன்ஷிப் முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!
வெள்ளி 4, ஜூலை 2025 4:57:07 PM (IST)

நெல்லையப்பர் திருக்கோயில் தேரோட்டம் பணிகள் : ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு!
வெள்ளி 4, ஜூலை 2025 12:12:23 PM (IST)

வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை : போலீஸ்காரர் கைது!
வெள்ளி 4, ஜூலை 2025 10:53:27 AM (IST)

நெல்லையில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி: ஜூலை 10ஆம் தேதி தொடங்குகிறது
வெள்ளி 4, ஜூலை 2025 8:14:52 AM (IST)
