» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு நாள்: நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி
செவ்வாய் 17, ஜூன் 2025 10:14:40 AM (IST)

சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதனின் நினைவு நாளையொட்டி அவருக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இந்திய சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன். இவர் கடந்த 1911ம் ஆண்டு ஜுன் 17ம் தேதி மணியாச்சி ரெயில் நிலையத்தில் அப்போதைய கலெக்டர் ராபர்ட் ஆஷை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், வாஞ்சிநாதனின் நினைவு நாளையொட்டி அவருக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பாரதத் தேசத்தை அடிமைப்படுத்தியதோடு, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை போன்ற பெரும் தலைவர்கள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்து, சித்திரவதை செய்த ஆங்கிலேய கொடுங்கோலர்களின் கொட்டத்தை அடக்க, தனது இருபத்தைந்து வயதிலேயே தேசத்திற்காக தன் இன்னுயிரையும் தியாகம் செய்த மாவீரர் வாஞ்சிநாதன் அவர்களின் நினைவு நாள் இன்று.
வீரத்தையும் தியாகத்தையும் நினைவுறுத்தும் இத்திருநாளில், வாஞ்சிநாதன் அவர்களின் புகழைப் போற்றுவோம்' தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண்வெட்டி கணையால் மகளை அடித்துக்கொன்ற தந்தை : நெல்லையில் பயங்கரம்!
புதன் 18, ஜூன் 2025 3:58:31 PM (IST)

மகளிர் உரிமைத்துறையில் தற்காலிக பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் தகவல்!
புதன் 18, ஜூன் 2025 3:16:01 PM (IST)

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்னை, நெல்லையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்!
புதன் 18, ஜூன் 2025 11:39:35 AM (IST)

சீலாத்திகுளத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் : ராதாபுரம் நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு
புதன் 18, ஜூன் 2025 11:26:30 AM (IST)

ராமேஸ்வரம், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே நிா்வாகம் தகவல்
புதன் 18, ஜூன் 2025 11:20:05 AM (IST)

வெடிகுண்டு வீசி வாலிபரை கொன்ற 10 பேருக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 18, ஜூன் 2025 8:37:30 AM (IST)
