» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை : நடத்தை சந்தேகத்தில் கணவர் வெறிச்செயல்!
செவ்வாய் 17, ஜூன் 2025 10:33:53 AM (IST)
சங்கரன்கோவில் அருகே நடத்தை சந்தேகத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே சின்னகோவிலாங்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் முத்துப்பாண்டியன் (38). இவர் காது கேட்காத மாற்றுத்திறனாளி. மேலநீலிதநல்லூர் யூனியன் அலுவலகத்தில் இவர் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி முத்துக்குமாரி (28). இவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகனும், மகளும் உள்ளனர். முத்துக்குமாரி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டு அவருடன் சென்று விட்டார்.
4 மாதங்களுக்கு பிறகு மீண்டும் வந்த அவர் முத்துப்பாண்டியனுடன் சோ்ந்து வாழ்ந்து வந்தார். இருந்தபோதும், மனைவியின் நடத்தையில் முத்துப்பாண்டியனுக்கு சந்தேகம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்பத்தகராறில் முத்துக்குமாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக முத்துப்பாண்டியன் சின்னகோவிலாங்குளம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய முத்துக்குமாரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் போலீசாருக்கு முரண்பாடான தகவல் கிடைத்தது. அதாவது, முத்துக்குமாரி மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து முத்துப்பாண்டியனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கழுத்தை நெரித்தும், அவரது மூக்கு, வாயை பொத்தியும் கொலை செய்தது தெரியவந்தது.
மேலும், உடலை தூக்கில் தொங்கவிட்டு, தனது மனைவி தற்கொலை செய்து கொண்டார் என நாடகமாடி அனைவரையும் நம்ப வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணைக்கு பிறகு முத்துப்பாண்டியனை கைது செய்தனர். இந்த சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண்வெட்டி கணையால் மகளை அடித்துக்கொன்ற தந்தை : நெல்லையில் பயங்கரம்!
புதன் 18, ஜூன் 2025 3:58:31 PM (IST)

மகளிர் உரிமைத்துறையில் தற்காலிக பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் தகவல்!
புதன் 18, ஜூன் 2025 3:16:01 PM (IST)

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்னை, நெல்லையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்!
புதன் 18, ஜூன் 2025 11:39:35 AM (IST)

சீலாத்திகுளத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் : ராதாபுரம் நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு
புதன் 18, ஜூன் 2025 11:26:30 AM (IST)

ராமேஸ்வரம், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே நிா்வாகம் தகவல்
புதன் 18, ஜூன் 2025 11:20:05 AM (IST)

வெடிகுண்டு வீசி வாலிபரை கொன்ற 10 பேருக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 18, ஜூன் 2025 8:37:30 AM (IST)
