» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!
புதன் 18, ஜூன் 2025 8:15:10 AM (IST)
கோவில்பட்டியில் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த குருசாமி மகன் ராஜ் (47). தொழிலாளியான இவர், மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாராம். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் நேற்று கோவில்பட்டி லட்சுமி ஆலை அருகே, தூத்துக்குடியிலிருந்து மைசூருக்கு சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாராம்.
இதுகுறித்து கோவில்பட்டி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், தூத்துக்குடி ரயில்வே போலீசார் சென்று, சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண்வெட்டி கணையால் மகளை அடித்துக்கொன்ற தந்தை : நெல்லையில் பயங்கரம்!
புதன் 18, ஜூன் 2025 3:58:31 PM (IST)

மகளிர் உரிமைத்துறையில் தற்காலிக பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் தகவல்!
புதன் 18, ஜூன் 2025 3:16:01 PM (IST)

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்னை, நெல்லையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்!
புதன் 18, ஜூன் 2025 11:39:35 AM (IST)

சீலாத்திகுளத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் : ராதாபுரம் நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு
புதன் 18, ஜூன் 2025 11:26:30 AM (IST)

ராமேஸ்வரம், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே நிா்வாகம் தகவல்
புதன் 18, ஜூன் 2025 11:20:05 AM (IST)

வெடிகுண்டு வீசி வாலிபரை கொன்ற 10 பேருக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 18, ஜூன் 2025 8:37:30 AM (IST)

naan thaanJun 18, 2025 - 01:42:55 PM | Posted IP 162.1*****