» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

வாளி தண்ணீரில் மூழ்கி 1½ வயது குழந்தை சாவு: தூத்துக்குடியில் பரிதாபம்!!

புதன் 18, ஜூன் 2025 8:30:08 AM (IST)

தூத்துக்குடியில் வீட்டில் விளையாடியபோது தண்ணீர் நிரப்பிய வாளியில் மூழ்கி 1½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் 2-வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ். மீனவரான இவருடைய மனைவி முத்துராணி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உண்டு. இதில் 2-வது குழந்தை மகிஷா (1½). கடந்த 15-ந் தேதி வீட்டில் குழந்தை விளையாடிக் கொண்டு இருந்தது. அப்போது, வீட்டில் ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அதன் அருகே விளையாடிய குழந்தை மகிஷா எதிர்பாராதவிதமாக தண்ணீர் வாளிக்குள் விழுந்தது. இதில் மூழ்கிய குழந்தை உயிருக்கு போராடியது. இதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குழந்தை மகிஷா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தது.

இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பான புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் அருளப்பன் விசாரணை நடத்தி வருகிறார். தண்ணீர் நிரப்பிய வாளியில் மூழ்கி 1½ வயது குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து

naan thaanJun 18, 2025 - 01:37:49 PM | Posted IP 104.2*****

ஒழுங்கா பாத்து வளர்க்க வக்கு இல்லனா எதுக்கு டா குழந்தை பெத்துக்குறீங்க... ஒன்னரை வயசு குழந்தையை பாக்குறத விட என்ன ஊம்புற வேலையா இருக்கு ...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory