» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மடத்தூரில் 13ம் நூற்றாண்டின் கமலை கிணற்றினை பாதுகாத்திட தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
புதன் 18, ஜூன் 2025 8:43:38 AM (IST)
தூத்துக்குடி மடத்தூரில் காணப்படும் 13ம் நூற்றாண்டின் கல்வெட்டோடு கூடிய கமலை கிணற்றினை பாதுகாத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கிணறானது பொ.ஊ1234ம் ஆண்டு ஆட்சி செய்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தினை சார்ந்தது என்பதனை இதில் காணப்படும் மங்கள சொற்களோடு ஆரம்பிக்கும் பாடல் கல்வெட்டின் வாயிலாக புலனாகிறது என்றும், இந்த தகவலானது ஆய்வாளரால் ஆவணம் இதழில் 34ஃ2023 தொகுப்பில் 57ம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இத்தகைய வரலாற்று சிறப்பு வாய்ந்த கிணறானது தற்போது பராமரிப்பு இல்லாமலும், பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளதால் தயவாய் பாதுகாத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக்கி நமது பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மனன் சுந்தரபாண்டியனின் நல்லெண்ணம் குன்றாது காத்திட தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் சார்பாக கோரிக்கைகளை பதிவு செய்கின்றோம் என்றார். மேலும், இது தொடர்பாக மாநகர ஆணையாளருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலாக கோரிக்கையினை சமர்ப்பத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மண்வெட்டி கணையால் மகளை அடித்துக்கொன்ற தந்தை : நெல்லையில் பயங்கரம்!
புதன் 18, ஜூன் 2025 3:58:31 PM (IST)

மகளிர் உரிமைத்துறையில் தற்காலிக பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் தகவல்!
புதன் 18, ஜூன் 2025 3:16:01 PM (IST)

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு சென்னை, நெல்லையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்!
புதன் 18, ஜூன் 2025 11:39:35 AM (IST)

சீலாத்திகுளத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் : ராதாபுரம் நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு
புதன் 18, ஜூன் 2025 11:26:30 AM (IST)

ராமேஸ்வரம், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்: ரயில்வே நிா்வாகம் தகவல்
புதன் 18, ஜூன் 2025 11:20:05 AM (IST)

வெடிகுண்டு வீசி வாலிபரை கொன்ற 10 பேருக்கு ஆயுள் தண்டனை: நெல்லை நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 18, ஜூன் 2025 8:37:30 AM (IST)
