» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஜூலை 15ம் தேதி தொடக்கம் : 10 ஆயிரம் முகாம்கள் நடத்த திட்டம்!

புதன் 18, ஜூன் 2025 10:16:48 AM (IST)



ஜூலை 15ம் தேதி தொடங்கவுள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆலோசனை நடத்தினார். 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தலைமையில் வரும் ஜூலை 15ம் தேதி தொடங்கவுள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து அனைத்துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களின் நலன் கருதி, தமிழ்நாட்டுக்குட்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு, மக்களுடன் முதல்வர் திட்டத்தினை அறிவித்து, மிகச்சிறப்பாக செயல்படுத்தி வந்தார்கள்.

அதனைத்தொடர்ந்து மக்களின் குறைகளைத்தீர்க்க அவர்களின் பகுதிகளிலேயே நேரிடையாக சென்று முகாம்கள் நடத்தி கோரிக்கை மனுக்களை பெற, உங்களுடன் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தினை வரும் ஜூலை மாதம் 15ம் தேதி துவக்கி வைக்கவுள்ளார்கள். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் கூலித்தொழில் செய்யும் ஏழை எளிய மக்களின் வசதிக்குகேற்ப அவர்களின் பகுதிகளுக்கு அருகாமையிலேயே தங்கள் குறைகளையும், கோரிக்கைகளையும், தேவைகளையும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வழங்குவதற்கு ஏற்ற வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வழிவகை செய்கிறது.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பகுதிகளிலேயே ஜூலை 15 தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் நடத்தப்படும். நகரப் பகுதிகளில் 3,768 முகாம்கள், கிராமப் பகுதிகளில் 3,232 முகாம்கள் என்று மொத்தம் 10 ஆயிரம் முகாம்கள் நடைபெறும். இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் எல்லாவற்றிலும் மருத்துவ முகாம்களும் கட்டாயம் இடம்பெறும்.

மேலும் அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, கூட்டுறவுத்துறை, உணவு வழங்கல் துறை, மின்சாரத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, மீன்வளத்துறை, சமூகநலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மாற்றுத்திறனாளி நலத்துறை, மகளிர் உரிமைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, தொழிலாளர் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, சிறு, குறு நடுத்தர நிறுவனங்கள் துறை, மாவட்ட தொழில் மையம், கால்நடை பாரமரிப்புத்துறை, அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம், உள்ளிட்ட அரசு துறைகளை சார்ந்த சேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. நகரப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகள், கிராமப் பகுதிகளில் 14 அரசுத் துறைகளின் 46 சேவைகள் வழங்கப்படும்.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 341 முகாம்கள் நடைபெறவுள்ளது. இம்முகாம்களில் 13, 14 துறைகளின் கீழ் தாட்கோ கடன்கள், இ- பட்டா, பட்டாவில் பெயர் மாற்றம் மற்றும் திருத்தம், கல்வி உதவித்தொகை, தூய்மைப்பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள், டாம்கோ கட்ன், ரேசன் கார்டு பெயர் மாற்றம் மற்றும் விண்ணப்பித்தல், மின்சார இணைப்பு மாற்றம், பெயர் திருத்தம், முதலமைச்சரின் விரிவான காப்பீடு அட்டை, ஆதார் பெயர்மாற்றம், புதுப்பித்தல், விண்ணப்பதல் தொடர்பான, திட்ட ஒப்புதல், அண்ணல் அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், வரி உரிமங்கள் மற்றும் அனுமதிகள், 

பிறப்பு இறப்பு சான்றிதழ்கள், காலியாக உள்ள நில வரி, தெருவோர விற்பனையாளர் அடையாள அட்டை, கழிவு நீர் இணைப்பு, சொத்துவரி, பெயர் மாற்றம், கட்டிடத் திட்ட ஒப்புதல், ஓய்வூதியம், தாமதமான பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகள், உபகரணங்கள், பராமரிப்பு மானியங்கள், வீட்டுத்தோட்டத்தை மேம்படுத்துதல், மின் வாடகை, கால்நடை கோழி வளர்ப்பு, புதிய வீட்டு வரி, வீட்டு வரி பெயர் மாற்றம், குடிநீர் குழாய் இணைப்பு உள்ளிட்ட திட்டங்கள் மற்றும் சேவைகள் தொடர்பான மனுக்கள் பெறப்படும்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற நாளிலிருந்து, பொதுமக்களுக்கு என பல்வேறு நலத்திட்ட உதவிகள் அறிவித்து, விரைவாக வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகையில் விடுப்பட்ட மகளிர் விண்ணப்பிக்கலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் தங்கள் சந்தேகங்களை துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும். இம்முகாமில் கலந்து கொள்ளும் அலுவலர்கள், பணியாளர்கள் பொதுமக்களின் கோரிக்கைகள், ஐயப்பாடுகள், பிரச்சனைகளை கனிவுடன் கேட்டறிந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் முகாம்களில் பெறப்படும் அனைத்து விண்ணபங்களிலும் உரிய ஆவணங்கள் இணைத்து இருப்பதை சரிபார்த்து தகுதியான விண்ணப்பங்களுக்கு 45 தினங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும். பதில் கிடைக்க பெறாத பொதுமக்கள் தங்களை நாடி வந்து கேட்கும் போது தகுந்த பதில்களை அவர்களுக்கு வழங்குவதோடு, அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் இம்முகாம் சிறப்பாக நடைபெறுவதற்கு அனைத்து துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வாலர்கள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் இணைந்து செயல்பட வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் ஊராட்சி பகுதிகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மகளிர் திட்ட சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக மகளிர் உரிமைத்தொகைகான விண்ணப்பங்கள், உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்த துண்டுபிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணவர்வு ஏற்படுத்த வேண்டும்.

தொடர்ந்து மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடைபெறும் இடங்கள், சேவைகள், அனைத்து துறை சார்பில் வழங்கப்பட்ட நலத்திட்டங்கள் மற்றும் திட்டங்களில் பயனடைந்த பயனாளிகள் குறித்த விளம்பர பதாகைகள் வைப்பதோடு, ஆட்டோக்கள், கேபிள் டிவி, சமூக ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்த துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இம்முகாமிற்கு வருகை தரும் அனைவருக்கும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, மருத்துவ அட்டை வழங்க வேண்டும். 

இம்மருத்துவ அட்டை பெறப்பட்ட அனைவரும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இம்முகாமிற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை துறை சார்ந்த அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். முகாமிற்கு வரும் அனைத்து பொதுமக்களுக்கும் உரிய பாதுகாப்பினை காவல் துறையினர் ஏற்படுத்த வேண்டும். May I Help You வாயிலாக முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்த துறை அரங்குகளுக்கு அழைத்து செல்வார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, தெரிவித்தார்கள்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ்.காளீஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சேக் அப்துல் காதர், அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory