» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் விழிஞ்ஞம் துறைமுகம் வந்தது: உற்சாக வரவேற்பு
செவ்வாய் 10, ஜூன் 2025 8:40:42 AM (IST)

உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல் விழிஞ்ஞம் துறைமுகம் வந்தடைந்தது. அந்த கப்பலுக்கு தண்ணீரை பீய்ச்சியடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் சர்வதேச விழிஞ்ஞம் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகம் கடந்த மே மாதம் 2-ந் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. துறைமுக வளாகத்தில் நடந்த பிரமாண்டமான விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த துறைமுக பணி ஆரம்பிக்கப்பட்ட போது கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த எதிர்ப்பை சமாளித்த கேரள அரசு, அங்கு துறைமுகத்தை கொண்டு வருவதில் முனைப்பை காட்டியது. இதனை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, வளர்ச்சி தான் முக்கியம் என்பதில் கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு செயல்படுவதாக பெருமையாக பேசினார்.
இதனை தொடர்ந்து விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு தினமும் உலக நாடுகளில் இருந்து கப்பல்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான எம்.எஸ்.சி. ஐரினா நேற்று காலை 8 மணிக்கு விழிஞ்ஞம் துறைமுகத்திற்கு வந்தது.
இந்தியாவில் இந்த கப்பல் நங்கூரமிட்ட முதல் துறைமுகம் விழிஞ்ஞம் ஆகும். எனவே இந்த கப்பலுக்கு தண்ணீரை பீய்ச்சியடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. 399.9 மீட்டர் நீளமும், 61.3 மீட்டர் அகலமும் கொண்ட இந்த சரக்கு கப்பல், ஒரு சர்வதேச கால்பந்து மைதானத்தை விட 4 மடங்கு பெரியதாகும். 20 அடி நீளம் கொண்ட 24 ஆயிரத்து 346 கன்டெய்னர்களை இந்த கப்பலில் ஏற்ற முடியும். லைபீரியா கொடியுடன் இந்த கப்பல் பயணிக்கிறது.
மேலும் இந்த பிரமாண்ட கப்பலின் மாலுமியாக பணியாற்றி வருபவர், கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த வில்லி ஆன்றனி ஆவார். இந்த பிரமாண்ட கப்பல் குறித்து வில்லி ஆன்றனி கூறுகையில், "எம்.எஸ்.சி. ஐரினா நங்கூரமிடும் இந்தியாவின் முதல் துறைமுகம் விழிஞ்ஞம் ஆகும். 2023-ம் ஆண்டு இந்த கப்பல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீனா, கொரியா, சிங்கப்பூர் வழியாக தற்போது விழிஞ்ஞம் வந்துள்ளது.
29 ஆண்டுகள் கடல் சார் அனுபவமுள்ள நான் இதுவரை 129 நாடுகளுக்கு பயணித்து உள்ளேன். உலகின் மிகப்பெரிய கப்பலில் விழிஞ்ஞம் துறைமுகம் வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்"என்றார். உலகின் மிகப்பெரிய சரக்க கப்பல் வந்ததன் மூலம் உலகளாவிய கப்பல் வரைபடத்தில் விழிஞ்ஞம் துறைமுகம் இடம் பிடித்தது இந்தியாவுக்கும், அதே சமயத்தில் கேரள மாநிலத்துக்கும் மேலும் பெருமை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் ரூ.1.5 லட்சம் மோசடி- வாலிபர் கைது!
புதன் 18, ஜூன் 2025 10:05:34 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 18, ஜூன் 2025 5:15:21 PM (IST)

தங்கம் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் : விஸ்வகர்மா சங்கம் தீர்மானம்
புதன் 18, ஜூன் 2025 4:15:08 PM (IST)

நாட்டுக்கோழிப் பண்ணை நிறுவிட 50% மானியம் : விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
புதன் 18, ஜூன் 2025 4:05:13 PM (IST)

மின்கம்பம் மாற்றும் பணிக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் : மின்வாரிய அதிகாரி கைது!
புதன் 18, ஜூன் 2025 3:28:19 PM (IST)

பேச்சிப்பாறை அணை நிரம்பி உபரிநீா் வெளியேற்றம் : திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
புதன் 18, ஜூன் 2025 11:32:12 AM (IST)
