» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மின்கம்பம் மாற்றும் பணிக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் : மின்வாரிய அதிகாரி கைது!
புதன் 18, ஜூன் 2025 3:28:19 PM (IST)
மின்கம்பம் மாற்றும் பணிக்கு அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்பிரபு (36) என்பவர் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தைக்கு கோவை மாவட்டம் நீலம்பூர் ஊராட்சி, முதலிப்பாளையத்தில் நிலம் உள்ளது. அந்த நிலத்தின் நடுவே ஒரு மின்கம்பம் உள்ளது. இதனால் அந்த மின்கம்பத்தை நிலத்தின் ஓரமாக மாற்றுவதற்காக செந்தில்பிரபு குறும்பப்பாளையம் மின்வாரிய அலுவலகத்தில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்தார்.
அந்த மின்கம்பத்தை மாற்றுவதற்கான செலவு ரூ.50 ஆயிரத்தை தாண்டுவதால், அதற்கு செயற்பொறியாளரின் அனுமதி பெற வேண்டியதாக இருந்தது. எனவே அவர் சோமனூர் மின்வாரிய செயற்பொறியாளர் சபரிராஜனை நேரில் சந்தித்துள்ளார். அவர் மின்கம்பம் மாற்றும் பணிக்கு அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டிருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த செந்தில் பிரபு, லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோமனூர் மின்வாரிய அலுவலகத்தில், ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாகப் பெற்ற, சபரி ராஜனை கையும் களவுமாக பிடித்து கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தங்கம் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் : விஸ்வகர்மா சங்கம் தீர்மானம்
புதன் 18, ஜூன் 2025 4:15:08 PM (IST)

நாட்டுக்கோழிப் பண்ணை நிறுவிட 50% மானியம் : விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
புதன் 18, ஜூன் 2025 4:05:13 PM (IST)

பேச்சிப்பாறை அணை நிரம்பி உபரிநீா் வெளியேற்றம் : திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
புதன் 18, ஜூன் 2025 11:32:12 AM (IST)

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை: ஒட்டன்சத்திரம் அருகே சோகம்!
புதன் 18, ஜூன் 2025 11:07:52 AM (IST)

ஐடி ரெய்டு நடக்கும் ஹோட்டலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: நடிகர் ஆர்யா விளக்கம்!
புதன் 18, ஜூன் 2025 10:45:35 AM (IST)

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் ஜூலை 15ம் தேதி தொடக்கம் : 10 ஆயிரம் முகாம்கள் நடத்த திட்டம்!
புதன் 18, ஜூன் 2025 10:16:48 AM (IST)
