» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மடத்தூரில் 13ம் நூற்றாண்டின் கமலை கிணற்றினை பாதுகாத்திட தொல்லியல் ஆர்வலர் கோரிக்கை!
புதன் 18, ஜூன் 2025 8:43:38 AM (IST)
தூத்துக்குடி மடத்தூரில் காணப்படும் 13ம் நூற்றாண்டின் கல்வெட்டோடு கூடிய கமலை கிணற்றினை பாதுகாத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கிணறானது பொ.ஊ1234ம் ஆண்டு ஆட்சி செய்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தினை சார்ந்தது என்பதனை இதில் காணப்படும் மங்கள சொற்களோடு ஆரம்பிக்கும் பாடல் கல்வெட்டின் வாயிலாக புலனாகிறது என்றும், இந்த தகவலானது ஆய்வாளரால் ஆவணம் இதழில் 34ஃ2023 தொகுப்பில் 57ம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இத்தகைய வரலாற்று சிறப்பு வாய்ந்த கிணறானது தற்போது பராமரிப்பு இல்லாமலும், பாதுகாப்பற்ற நிலையிலும் உள்ளதால் தயவாய் பாதுகாத்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக்கி நமது பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மனன் சுந்தரபாண்டியனின் நல்லெண்ணம் குன்றாது காத்திட தொல்லியல் ஆர்வலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் சார்பாக கோரிக்கைகளை பதிவு செய்கின்றோம் என்றார். மேலும், இது தொடர்பாக மாநகர ஆணையாளருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலாக கோரிக்கையினை சமர்ப்பத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தங்கம் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் : விஸ்வகர்மா சங்கம் தீர்மானம்
புதன் 18, ஜூன் 2025 4:15:08 PM (IST)

நாட்டுக்கோழிப் பண்ணை நிறுவிட 50% மானியம் : விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
புதன் 18, ஜூன் 2025 4:05:13 PM (IST)

மின்கம்பம் மாற்றும் பணிக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் : மின்வாரிய அதிகாரி கைது!
புதன் 18, ஜூன் 2025 3:28:19 PM (IST)

பேச்சிப்பாறை அணை நிரம்பி உபரிநீா் வெளியேற்றம் : திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
புதன் 18, ஜூன் 2025 11:32:12 AM (IST)

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை: ஒட்டன்சத்திரம் அருகே சோகம்!
புதன் 18, ஜூன் 2025 11:07:52 AM (IST)

ஐடி ரெய்டு நடக்கும் ஹோட்டலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: நடிகர் ஆர்யா விளக்கம்!
புதன் 18, ஜூன் 2025 10:45:35 AM (IST)
