» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை: ஒட்டன்சத்திரம் அருகே சோகம்!

புதன் 18, ஜூன் 2025 11:07:52 AM (IST)



ஒட்டன்சத்திரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மாள் (65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள் பவித்ரா (28) என்பவருக்கும் கரூர் மாவட்டம் பள்ளபட்டி அருகே உள்ள செளந்தபுரம் பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

இதனிடையே, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதமாக சின்ன குழிப்பட்டியில் உள்ள தாயார் காளீஸ்வரியுடன் பவித்ரா வசித்து வந்தார். இந்த நிலையில், பள்ளபட்டியைச் சேர்ந்த ஒருவருடன் பவித்ராவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபருடன் நேற்று (ஜூன் 17) மாலை 6 மணியளவில் பவித்ரா வீட்டை விட்டுச் சென்றுவிட்டார்.

இதனால், அவமானம் அடைந்த பாட்டி செல்லம்மாள், அவரது மகள் காளீஸ்வரி ஆகிய இருவரும் பேத்திகளான லித்திக்ஸா(7), தீப்தி (5) ஆகிய இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பர் என சந்தேகிக்கிப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த இடையகோட்டை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நான்கு பேரின் உடல்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory