» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூல்: தமிழக அரசு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 10, ஜூன் 2025 11:05:21 AM (IST)
தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தியேட்டர்களில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களுக்கு முதல் நான்கு நாட்கள் அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கூறி தேவராஜன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, தியேட்டர்களில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், இன்றைய காலத்தில் தியேட்டர்களில் படம் பார்க்கும்போது வாங்கி சாப்பிடும் பாப்கார்ன் கூட வீட்டிற்கே டெலிவிரி செய்யும் நிலை உள்ளது என்றும், ஓ.டி.டி.யால் தியேட்டர்கள் நீண்ட காலம் நீடிக்காது என்பதை தியேட்டர்கள் உரிமையாளர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் ரூ.1.5 லட்சம் மோசடி- வாலிபர் கைது!
புதன் 18, ஜூன் 2025 10:05:34 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 18, ஜூன் 2025 5:15:21 PM (IST)

தங்கம் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் : விஸ்வகர்மா சங்கம் தீர்மானம்
புதன் 18, ஜூன் 2025 4:15:08 PM (IST)

நாட்டுக்கோழிப் பண்ணை நிறுவிட 50% மானியம் : விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
புதன் 18, ஜூன் 2025 4:05:13 PM (IST)

மின்கம்பம் மாற்றும் பணிக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் : மின்வாரிய அதிகாரி கைது!
புதன் 18, ஜூன் 2025 3:28:19 PM (IST)

பேச்சிப்பாறை அணை நிரம்பி உபரிநீா் வெளியேற்றம் : திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
புதன் 18, ஜூன் 2025 11:32:12 AM (IST)
