» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி: 2பேர் கைது!

செவ்வாய் 10, ஜூன் 2025 11:51:21 AM (IST)

சுசீந்திரம் அருகே கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் மேல தெருவை சேர்ந்த பெயிண்டர் அய்யப்பன் (33). இவரது நண்பர் டேனியல். சம்பவத்தன்று இருவரும் பைக்கில் சுசீந்திரம் அருகே கற்காடு ரயில்வே கிராசிங் அருகே சென்ற கொண்டிருந்தனர். அப்போது சுசீந்திரம் கற்காடு பகுதியை சேர்ந்த பிரசாந்த் (26), கோட்டார் சபையார்குளத்தை சேர்ந்த அர்ஜுன் (23) ஆகிய இருவரும் சேர்ந்து அய்யப்பனை வழிமறித்தனர். 

பின்னர் தகாத வார்த்தைகள் பேசி தாக்கியும், கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.1000-த்தை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அய்யப்பன் சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பிரசாந்த், அர்ஜுன் ஆகிய 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory