» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆட்சியர் அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை: புதுக்கடை அருகே சோகம்!

செவ்வாய் 10, ஜூன் 2025 11:54:03 AM (IST)

புதுக்கடை அருகே கடன் தொல்லையால் ஆட்சியர் அலுவலக ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு கண்ணன் விளாகம் பகுதியை சேர்ந்தவர் ரசல் ராஜ் (55). இவர் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். ரசல் ராஜ் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடன் தொல்லையும் இருந்து வந்ததாக தெரிகிறது. 

இதனால் மனவேதனை அடைந்த ரசல் ராஜ் நேற்று முன் தினம் வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory