» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கீழடி ஆய்வை அங்கீகரிக்க இன்னும் நிறைய சான்றுகள் தேவை - மத்திய அமைச்சர் பேட்டி!
புதன் 11, ஜூன் 2025 8:43:55 AM (IST)
கீழடி அகழாய்வு அறிவியல்பூர்வமான, தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. இதனை அங்கீகரிக்க இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்தார்.
சென்னை கமலாலயத்தில் மத்திய கலாசாரத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத், மத்திய பா.ஜனதா அரசின் 11 ஆண்டுகால சாதனை மலரை வெளியிட்டார். அதனை தமிழ்நாடு பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில், முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக பா.ஜனதா மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி உள்பட பலர் உடன் இருந்தனர்.
பின்னர், மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடியின் தலைமையில் ஊழல் இல்லாத, வெளிப்படையான நிர்வாகம் நடந்து வருகிறது. பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சி காலத்தில் வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது. 30 கோடி ஏழைகள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். பொதுமக்கள் குறிப்பாக ஏழைகள் நலன் காக்கும் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நடைபெற்று வரும் கீழடி அகழ்வாராய்ச்சியானது அறிவியல்பூர்வமான, தொழில்நுட்ப ரீதியில் இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முன் ஏராளமான நடைமுறைகள் உள்ளன. அதற்கு இன்னும் நிறைய சான்றுகள் தேவைப்படுகின்றன. அவ்வாறு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதும் அதற்கான அங்கீகாரம் வழங்கப்படும்.
இது மக்களின் உணர்வுபூர்வமான விஷயம் என்பதால் நாங்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் அதனை முழுமையாக ஆய்வு செய்யட்டும். அவர்கள் தொழில்நுட்ப ரீதியாக நிரூபிக்கட்டும். அவர்களே முடிவு செய்யட்டும். இது அரசியல்வாதிகள் முடிவு செய்யும் விஷயம் அல்ல.
ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரசார் பிரதமர் மோடியின் சாதனையை விமர்சனம் செய்யலாம். ஆனால் வளர்ச்சி அடைந்த இந்தியாவை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் பல மாநிலங்களில் பா.ஜனதா ஆட்சியை பிடித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியை இழந்து வருகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மத்திய தணிக்கை துறை அறிக்கையில் சாலை அமைப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது என்பது ஒரு அனுமானம் தான். இந்த விவகாரத்தை பொறுத்தவரை நிலங்கள் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மாவட்ட கலெக்டர்களும், மாநில அரசுகளும் செய்து வருகின்றன. எனவே நிதி கூடுதலாக செலவிடப்பட்டு இருக்கலாம்.
இது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். அதற்காக இதையும் தி.மு.க.வினரின் 2-ஜி ஊழல் வழக்கோடு ஒப்பிட வேண்டியது இல்லை. இது சில நடைமுறை குறைபாடுகள் தான். அதை ஆய்வு செய்து சீர்படுத்த முடியும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் ரூ.1.5 லட்சம் மோசடி- வாலிபர் கைது!
புதன் 18, ஜூன் 2025 10:05:34 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 18, ஜூன் 2025 5:15:21 PM (IST)

தங்கம் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் : விஸ்வகர்மா சங்கம் தீர்மானம்
புதன் 18, ஜூன் 2025 4:15:08 PM (IST)

நாட்டுக்கோழிப் பண்ணை நிறுவிட 50% மானியம் : விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
புதன் 18, ஜூன் 2025 4:05:13 PM (IST)

மின்கம்பம் மாற்றும் பணிக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் : மின்வாரிய அதிகாரி கைது!
புதன் 18, ஜூன் 2025 3:28:19 PM (IST)

பேச்சிப்பாறை அணை நிரம்பி உபரிநீா் வெளியேற்றம் : திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
புதன் 18, ஜூன் 2025 11:32:12 AM (IST)
