» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
உயர்ரக போதை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வக்கீல் கைது
புதன் 11, ஜூன் 2025 8:52:10 AM (IST)

நாகர்கோவில் அருகே உயர்ரக போதை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த வக்கீலை போலீசார் கைது செய்தனர்.
குமாி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க எஸ்பி ஸ்டாலின் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 131 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில் நாகர்கோவில் கோட்டார் போலீசார் நேற்று கோதை கிராமம் ரெயில்வே கேட் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த வக்கீலான சக்திவேல் (25) என்பது தெரியவந்தது. பின்னர் அவரது மோட்டார் சைக்கிளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அதில் அரிதான உயர்ரக போதை பொருட்களான மெத்தம் பேட்டமைன், எல்.எஸ்.டி. ஸ்டாம்ப் ஆகிய போதை பொருட்கள் இருந்தன. இதைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்த போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த வகையில் மெத்தம் பேட்டமைன் 12.08 கிராமும், எல்.எஸ்.டி. ஸ்டாம்ப் 0.42 மில்லி கிராமும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் ஆய்வகத்தில் தயார் செய்யப்படுபவை ஆகும். வெளி மாநிலத்தில் மட்டும் கிடைக்கும் இந்த போதை பொருளை சக்திவேல் வாங்கி வந்து விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இந்த போதை பொருள் ஒரு கிராம் ரூ.2 ஆயிரத்துக்கு வாங்கப்பட்டு ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போதை பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருப்பினும் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் ரூ.1.5 லட்சம் மோசடி- வாலிபர் கைது!
புதன் 18, ஜூன் 2025 10:05:34 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 18, ஜூன் 2025 5:15:21 PM (IST)

தங்கம் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் : விஸ்வகர்மா சங்கம் தீர்மானம்
புதன் 18, ஜூன் 2025 4:15:08 PM (IST)

நாட்டுக்கோழிப் பண்ணை நிறுவிட 50% மானியம் : விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
புதன் 18, ஜூன் 2025 4:05:13 PM (IST)

மின்கம்பம் மாற்றும் பணிக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் : மின்வாரிய அதிகாரி கைது!
புதன் 18, ஜூன் 2025 3:28:19 PM (IST)

பேச்சிப்பாறை அணை நிரம்பி உபரிநீா் வெளியேற்றம் : திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
புதன் 18, ஜூன் 2025 11:32:12 AM (IST)
