» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நீதிமன்ற வளாகத்தில் பெண் போலீசை மிரட்டி கோப்புகளை பறித்த வக்கீல் கைது
புதன் 11, ஜூன் 2025 8:53:34 AM (IST)
பத்மநாபபுரம் நீதிமன்ற வளாகத்தில் பெண் போலீசை மிரட்டி கோப்புகளை பறித்த வக்கீல் கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம், குலசேகரம் காவல் நிலையத்தில் போலீசாக சபீனா பணியாற்றி வருகிறார். இவர் கோர்ட்டு பணிகளை கவனித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் கோர்ட்டு பணி தொடர்பான கோப்புகளுடன் தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் கோர்ட்டுக்கு வந்தார்.
அப்போது அங்கு குற்றவியல் கோர்ட்டில் உள்ள வழக்கை முடிப்பதற்காக வந்த நபர்களிடம், அங்கு நின்ற 2 வக்கீல்களை குறிப்பிட்டு அவர்களை பார்க்குமாறு கூறியுள்ளார். இதை அங்கு நின்ற வக்கீல் ஜெஸ்டின் (35) கவனித்து கொண்டிருந்தார். அவர் பெண் போலீசை பார்த்து, ‘என்னை பார்த்தால் வக்கீல் போல தெரியவில்லையா?’ என கேட்டு தகராறு செய்துள்ளார். அத்துடன் பெண் போலீசின் கையில் இருந்த கோப்புகளை பறித்து எறிந்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பெண் போலீஸ் சபீனா தக்கலை போலீசில் புகார் செய்தார். அந்த புகாரின்பேரில் வக்கீல் ஜெஸ்டின் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். இவர் கைது செய்யப்பட்டதை அறிந்த ஏராளமான வக்கீல்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர். இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிவிரைவு படை போலீசார் வரவழைக்கப்பட்டு காவல் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து இரவில் வக்கீல் ஜெஸ்டினை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து சென்றனர். இதனையடுத்து அங்கிருந்த வக்கீல்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் தக்கலை காவல் நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் ரூ.1.5 லட்சம் மோசடி- வாலிபர் கைது!
புதன் 18, ஜூன் 2025 10:05:34 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 18, ஜூன் 2025 5:15:21 PM (IST)

தங்கம் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் : விஸ்வகர்மா சங்கம் தீர்மானம்
புதன் 18, ஜூன் 2025 4:15:08 PM (IST)

நாட்டுக்கோழிப் பண்ணை நிறுவிட 50% மானியம் : விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
புதன் 18, ஜூன் 2025 4:05:13 PM (IST)

மின்கம்பம் மாற்றும் பணிக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் : மின்வாரிய அதிகாரி கைது!
புதன் 18, ஜூன் 2025 3:28:19 PM (IST)

பேச்சிப்பாறை அணை நிரம்பி உபரிநீா் வெளியேற்றம் : திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
புதன் 18, ஜூன் 2025 11:32:12 AM (IST)
