» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கப்பல் ஊழியர் வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை : தூத்துக்குடியில் மர்ம நபர்கள் கைவரிசை!
புதன் 11, ஜூன் 2025 12:40:46 PM (IST)
தூத்துக்குடியில் கப்பல் ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாதா கோவில் தெருவைச் சேர்தவர் செல்லையா மகன் கில்பர்ட் (73). கப்பலில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் மற்றும் மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 8ம் தேதி கில்பர்ட் வீட்டை பூட்டிவிட்டு கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் இன்று காலை ஊர் திரும்பியுள்ளார்.
அப்போது, வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவிலிருந்த 32 சவரன் தங்க நகைகள் திருடு போயிருந்தது. இதுகுறித்து அவர் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும், சம்பவ இடத்தை டவுண் ஏஎஸ்பி மதன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகை மற்றும் தடயங்களை சேகரித்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆன்லைன் டிரேடிங் என்ற பெயரில் ரூ.1.5 லட்சம் மோசடி- வாலிபர் கைது!
புதன் 18, ஜூன் 2025 10:05:34 PM (IST)

கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு!
புதன் 18, ஜூன் 2025 5:15:21 PM (IST)

தங்கம் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் : விஸ்வகர்மா சங்கம் தீர்மானம்
புதன் 18, ஜூன் 2025 4:15:08 PM (IST)

நாட்டுக்கோழிப் பண்ணை நிறுவிட 50% மானியம் : விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
புதன் 18, ஜூன் 2025 4:05:13 PM (IST)

மின்கம்பம் மாற்றும் பணிக்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் : மின்வாரிய அதிகாரி கைது!
புதன் 18, ஜூன் 2025 3:28:19 PM (IST)

பேச்சிப்பாறை அணை நிரம்பி உபரிநீா் வெளியேற்றம் : திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
புதன் 18, ஜூன் 2025 11:32:12 AM (IST)
