» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அனந்தனாறு கால்வாயில் ரூ.1.10 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்: ஆட்சியர் ஆய்வு

திங்கள் 16, ஜூன் 2025 5:24:15 PM (IST)



அனந்தனாறு கால்வாயில் ரூ.1.10 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்ட நீர்வள ஆதாராத்துறை சார்பில் தோவாளை வட்டத்துக்குட்பட்ட செண்பகராமன்புதூர் ஊராட்சிக்குட்பட்ட தோவாளை கால்வாய், உள்ளிமலை கால்வாய், சுருளகோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சிதிட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்:- முதலமைச்சர் கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்து, வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்கள். 

அதனடிப்படையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை கால்வாய் மூலம் பாசனம் பெறும் செண்பகராமன்புதூர் சுற்றியுள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தோவாளை கால்வாய் மற்றும் அதன் கிளை கால்வாய்கள் வழியாக தண்ணீர் கடைமடை வரை செல்வதை பார்வையிட்டு, விவசாயிகளிடம் கலந்துரையாடப்பட்டது. மேலும் கால்வாயில் தங்கு தடையின்றி தண்ணீர் செல்வதற்கு ஏற்படும் இடையூறுகளை களைவதுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஒவ்வொரு வயலுக்கும் தண்ணீர் செல்வதை உறுதி செய்யும்படி வேளாண்மை துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து நிரந்த வெள்ள தடுப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.10 கோடி மதிப்பில் அனந்தனாறு கால்வாயில் உள்ளிமலை பகுதியில் ஏற்பட்ட உடைப்பினை நிரந்தரமாக சீரமைக்கும் பணிகள் நேரில் பார்வையிடப்பட்டது. ஆனந்தனாறு கால்வாய் மூலம் பாசனம் பெறும் பகுதிகள் நீரின்றி கருகாதவாறு விரைவில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீர்வள ஆதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

இப்பணிகளை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு ஒப்பந்தாரர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து சுருளகோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பணியாளர்களிடம் கலந்துரையாடப்பட்டது என்று தெரிவித்தார்.

ஆய்வில் வேளாண்மை இணை இயக்குனர் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் விவசாயம் ஜென்கின் பிரபாகர், வேளாண்மை துணை இயக்குனர், வேளாண்மை உதவி இயக்குனர், முன்னோடி விவசாயிகள், நீரினை பயன்படுத்துவர் சங்க நிர்வாகிகள், துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Tirunelveli Business Directory