» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை: தலைமைச் செயலாளர் எச்சரிக்கை
செவ்வாய் 8, ஜூலை 2025 4:11:52 PM (IST)
நாடு முழுவதும் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து நாளை பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. வங்கித் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தியும் நாளை ஜூலை 9-ஆம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், நாடு முழுவதும் நாளை நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். சம்பள நிறுத்தம், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவில் முழு அடைப்பு: தமிழகப் பேருந்துகள் எல்லையில் நிறுத்தம் - பொதுமக்கள் அவதி!
வியாழன் 12, பிப்ரவரி 2026 3:12:37 PM (IST)

என்எல்சி நிறுவனத்தில் ₹442 கோடி முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:43:05 PM (IST)

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் இணைய வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன் அழைப்பு
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:25:19 PM (IST)

அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற வேண்டும் : பயணிகள் சங்கம் கோரிக்கை!
வியாழன் 12, பிப்ரவரி 2026 12:14:10 PM (IST)

விஜயின் பேன்ட் நிறத்தையும் முதல்வர் ஸ்டாலின் திருடுகிறார் : நாஞ்சில் சம்பத் பேச்சு!
வியாழன் 12, பிப்ரவரி 2026 11:15:48 AM (IST)

தமிழ்நாட்டு மக்களை திமுக முட்டாள்களாக்க முயற்சி : அன்புமணி குற்றச்சாட்டு
வியாழன் 12, பிப்ரவரி 2026 11:04:59 AM (IST)

