» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)
வள்ளியூர் அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று மூதாட்டியை மிரட்டி நகை, பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு ஆறுபுளி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னம்மாள் (70). இவரது கணவர் ஞானபிரகாசம் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால் அன்னம்மாள் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்க சென்றார்.
அப்போது, வீட்டின் கதவை மர்மநபர்கள் தட்டினர். ஆனால் அவர் திறக்காததால், வீட்டின் ஜன்னலை உடைத்து 3 மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அன்னம்மாளை மிரட்டி, அவர் காதில் அணிந்திருந்த 3 கிராம் தங்க கம்மல், ரூ.1,000 ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். நேற்று காலையில் அக்கம் பக்கத்தினருக்கு நடந்த சம்பவத்தை அன்னம்மாள் கூறினார்.
அவர்கள் உடனடியாக வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லை-மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு : தெற்கு ரயில்வே அறிவிப்பு
வியாழன் 3, ஜூலை 2025 8:52:46 AM (IST)

சங்கரன்கோவில் தி.மு.க. நகராட்சி தலைவி பதவி இழந்தார்: சொந்த கட்சி கவுன்சிலர்களே கவிழ்த்தனர்!
வியாழன் 3, ஜூலை 2025 8:51:16 AM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி முகாம்: ஆட்சியர் இரா.சுகுமார் துவக்கி வைத்தார்!
புதன் 2, ஜூலை 2025 12:16:37 PM (IST)

விதிமீறல் : பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்ற ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!
புதன் 2, ஜூலை 2025 11:29:00 AM (IST)

அம்பாசமுத்திரம் வட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் இரா.சுகுமார் ஆய்வு
செவ்வாய் 1, ஜூலை 2025 12:29:06 PM (IST)

பீகாரில் 20 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தந்தையை மகனிடம் ஒப்படைத்த ஆட்சியர்!!
திங்கள் 30, ஜூன் 2025 4:41:15 PM (IST)
