» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
வீடுபுகுந்து மூதாட்டியிடம் நகை, பணம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:23:38 PM (IST)
வள்ளியூர் அருகே வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று மூதாட்டியை மிரட்டி நகை, பணத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள தெற்கு ஆறுபுளி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்னம்மாள் (70). இவரது கணவர் ஞானபிரகாசம் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டதால் அன்னம்மாள் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் தூங்க சென்றார்.
அப்போது, வீட்டின் கதவை மர்மநபர்கள் தட்டினர். ஆனால் அவர் திறக்காததால், வீட்டின் ஜன்னலை உடைத்து 3 மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர். அன்னம்மாளை மிரட்டி, அவர் காதில் அணிந்திருந்த 3 கிராம் தங்க கம்மல், ரூ.1,000 ஆகியவற்றை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். நேற்று காலையில் அக்கம் பக்கத்தினருக்கு நடந்த சம்பவத்தை அன்னம்மாள் கூறினார்.
அவர்கள் உடனடியாக வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை : முதல்கட்ட கணினி குலுக்கல் ஒதுக்கீடு பணி நிறைவு!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 5:17:19 PM (IST)

கோடை வெயில்: நெல்லை அணைகளின் நீர்மட்டம் சரிவு – 52 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 4:49:57 PM (IST)

நெல்லை அருகே பெண்ணைத் தாக்கி 29 பவுன் நகை கொள்ளை - சிறுவன் உட்பட 4 பேர் கைது!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 3:38:01 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் மே 1-ஆம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் உத்தரவு!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 11:00:07 AM (IST)

சிறுமியைப் பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:57:05 AM (IST)

விளைச்சல் குறைவால் சின்ன வெங்காயம், தக்காளி விலை கிடுகிடு உயர்வு: இல்லத்தரசிகள் அதிர்ச்சி!
செவ்வாய் 28, ஏப்ரல் 2026 8:48:40 AM (IST)


