» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தேசிய கைத்தறி தின சிறப்பு கண்காட்சி விற்பனை : ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்!

வியாழன் 7, ஆகஸ்ட் 2025 12:14:37 PM (IST)



திருநெல்வேலியில் 11-வது தேசிய கைத்தறி தினத்தினையொட்டி நடைபெற்ற சிறப்பு கைத்தறி கண்காட்சி விற்பனையை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், தொடங்கி வைத்து, நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (07.08.2025) 11-வது தேசிய கைத்தறி தினத்தினையொட்டி நடைபெற்ற சிறப்பு கைத்தறி கண்காட்சி விற்பனையை மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் 75 வயதைக் கடந்தும் நெசவுத் தொழில் செய்து வரும் 3 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் கௌரவித்தார்.

தொடர்ந்து, நெசவாளர் முத்ரா கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் அரசு மான்யம் மற்றும் வட்டி மான்யத்துடன் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் 7 உறுப்பினர்களுக்கு கடன் தொகையாக ரூ.6 இலட்சமும், நெசவாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 11 நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளும் மற்றும் கைத்தறி குழுமத் திட்டத்தின் கீழ் 5 நெசவாளர்களுக்கு தறி உபகரணங்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி சரக கைத்தறி உதவி இயக்குநர் ஆரோக்கியராஜ் , கைத்தறி அலுவலர் செண்பகராஜ் மற்றும் கைத்தறி துறை அலுவலகப் பணியாளர்கள், நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory