» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பைந்தமிழ் இலக்கியப் பேரவை ஆண்டு விழா!
சனி 8, நவம்பர் 2025 10:52:49 AM (IST)

பாப்பாக்குடியில் பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் 9ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடியில் பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் 9ஆம் ஆண்டு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு, தமிழாசிரியர் மு. விசுவநாதன் தலைமை வகித்தார். தென்காசி திருவள்ளுவர் கழகச் செயலர் இராம. தீர்த்தராப்பன், அம்பைத் தமிழ் இலக்கியப் பேரவைத் தலைவர் புலவர் நீ. அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பின் தலைவர் பாப்பாக்குடி அ.முருகன் வரவேற்றார். இ. முருகேசன், விவேகானந்தா பாலர் பள்ளி ஆசிரியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர். பேராசிரியர் பா. செந்தில் குமரன், முத்தமிழின் மாண்பு என்ற தலைப்பில் பேசினார்.
கல்வியில் சிறந்து விளங்கிய 8 மற்றும் 10ஆவது வகுப்பு மாணவிகளுக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் வி.ஏ.மாரிவண்ணமுத்து, ஊராட்சித் தலைவர் ஆனைக்குட்டி பாண்டியன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். தமிழ் பணியில் ஈடுபட்டு வரும் பாமணி, நாறும்பூநாதன், ச. பாலசுப்பிரமணியன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
விழாவில், அகஸ்தியர்பட்டி ஐ. லெட்சுமணன் எழுதிய மனமே எல்லாம் எனும் நூலை அம்பை தமிழ் இலக்கியப் பேரவையின் செயலர் ச. இலட்சுமணன் வெளியிட்டார். தமிழறிஞர் ந. சுப்பையா, சொ. முத்துசாமி, ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழகத் தலைவர் கு.ம. சங்கரநாராயணன், நல்லாசிரியர் ச. மாடசாமி, உலகத் திருக்குறள் மைய மாவட்டத் தலைவர் வை. இராமசாமி, கல்லிடைக்குறிச்சி வாசகர் வட்டத் தலைவர் திருவருள் லத்திப், முக்கூடல் மனவளக்கலை மன்ற பேராசிரியர் ச. கோபாலகிருஷ்ணன், வீரவநல்லூர் வாசகர் வட்டத் தலைவர் பீ. ஆதம் இல்யாஸ், கலைப் பதிப்பக உரிமையாளர் பாப்பாக்குடி இரா. செல்வமணி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். த. சந்தனகுமார், த. ராஜேந்திரன், வீரை ஆ. ராஜேந்திரன் ஆகியோர் கவிதை வாசித்தனர். நிகழ்ச்சியை சீதாராமன் தொகுத்து வழங்கினார். மு. செல்வகுமார் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் நாளை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:54:01 AM (IST)

விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:36:34 AM (IST)

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : போக்சோ நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 8:52:42 AM (IST)

தென்காசியில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300 வீரர்கள் ராணுவத்திற்கு தேர்வு..!!
புதன் 24, டிசம்பர் 2025 11:59:50 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

