» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
இராணுவத்தில் சேர இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு : அக்னிபாத் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
செவ்வாய் 24, மார்ச் 2026 5:14:50 PM (IST)
அக்னிவீர் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஏப்ரல் 1-ஆம் தேதி கடைசி நாள் என்பதால், இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் 2026-27-ஆம் ஆண்டிற்கான 'அக்னிவீர்' திட்டத்தின் கீழ் ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 1-ஆம் தேதி கடைசி நாள் என்பதால், இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயன்பெறுமாறு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இரா. சுகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
விண்ணப்பக் காலம்: 13.02.2026 முதல் 01.04.2026 வரை.
வயது வரம்பு: 17.5 முதல் 22 வயது வரை (01.07.2005 முதல் 01.07.2009-க்குள் பிறந்திருக்க வேண்டும்).
கல்வித்தகுதி: 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ITI, டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு நடைபெறும் காலம்: ஜூன் 2026.
குறிப்பு: எழுத்துத் தேர்வைத் தமிழ் மொழியிலும் எழுதலாம்.
மாவட்ட நிர்வாகத்தின் இலவசப் பயிற்சி முகாம்கள்:
ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் சேர ஆர்வம் உடைய இளைஞர்களுக்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 'வெற்றிநடை' என்ற பெயரில் சிறப்புப் பயிற்சி முகாம்கள் இலவசமாக நடத்தப்பட்டு வருகின்றன.
உடல் தகுதிப் பயிற்சி: வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 5:30 மணி முதல் 7:30 மணி வரை.
வகுப்பறைப் பயிற்சி: சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.
ஆன்லைன் வகுப்பு: திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை.
பயிற்சி மையங்கள் நடைபெறும் இடங்கள்:
பேட்டை மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி.
சங்கர்நகர் மேல்நிலைப்பள்ளி.
அம்பாசமுத்திரம் அரசு கலைக்கல்லூரி.
வீரவநல்லூர் புனித ஜான்ஸ் மேல்நிலைப்பள்ளி.
நாங்குநேரி சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி.
வள்ளியூர் அரசு மேல்நிலைப்பள்ளி.
விஜயநாராயணம் ரெக்ட் தொழில்நுட்ப கல்லூரி.
தேவர்குளம் புனித ஜோசப் குளோபல் மேல்நிலைப்பள்ளி.
இளைஞர்கள் மேலதிக விவரங்களுக்கு www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் அல்லது 9952594351 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு விவரங்களைப் பெறலாம்.
தன்னார்வமும் தகுதியும் கொண்ட திருநெல்வேலி மாவட்ட இளைஞர்கள், இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி இந்திய ராணுவத்தில் இணைந்து தேசப்பணியாற்ற முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் குரூப் 2 தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் 24ஆம் தேதி தொடங்குகிறது!
வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 10:44:13 AM (IST)

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!: போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:53:39 PM (IST)

நெல்லை அருகே காகித ஆலையில் பயங்கர தீ விபத்து: 25,000 டன் காகிதங்கள் எரிந்து நாசம்!
வியாழன் 20, ஆகஸ்ட் 2026 12:17:22 PM (IST)

உலக புகைப்பட தினம்: நெல்லை புகைப்படக் கலை சங்கத்தினர் ரத்ததானம்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 5:41:48 PM (IST)

ஒப்பந்ததாரரிடம் ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்ற வனச்சரகர் கைது: லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி!
புதன் 19, ஆகஸ்ட் 2026 3:28:19 PM (IST)

நீட் தேர்வில் வெற்றி: ஒரே நேரத்தில் மருத்துவப் படிப்புக்கு தேர்வான நெசவுத்தொழிலாளியின் 3 மகன்கள்!
புதன் 19, ஆகஸ்ட் 2026 8:42:51 AM (IST)


