» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
ஆசிரியைகளிடம் 160 பவுன், ரூ.31½ லட்சம் நூதன மோசடி: பெண்கள் உள்பட 4 பேர் கைது
ஞாயிறு 9, நவம்பர் 2025 9:13:59 AM (IST)
இரிடியத்தில் முதலீடு செய்வதாக கூறி 2 ஆசிரியைகளிடம் 160 பவுன், ரூ.31½ லட்சம் மோசடி செய்த வழக்கில் பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தை சேர்ந்தவர் ராஜாத்தி (வயது 65). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவரிடம் கடந்த ஆண்டு 4 பேர் கும்பல், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையம் உதவிக்காக கேட்டு சுமார் ரூ.1½ லட்சம் மற்றும் 160 பவுன் நகைகளை வாங்கினர். பின்னர் அந்த நகைகளை திருப்பி கொடுக்காமல் இரிடியத்தில் முதலீடு செய்ததாக கூறி அதற்கான போலி ரசீதுகளை கொடுத்து அவரை ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர் நெல்லை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் 4 பேர் மீது வழக்குப்பதிந்து, ராதாபுரத்தைச் சேர்ந்த பவுலின் ராணி என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இதேபோல் தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை லட்சுமி என்பவரிடம் கடந்த 2023 முதல் 2025 வரை 7 பேர் கொண்ட கும்பல் இரிடியம் வாங்கி வெளிநாட்டில் விற்பனை செய்தால் பல கோடி லாபம் பெறலாம் என ஆசைவார்த்தை கூறினர்.
இதனை நம்பிய அவர் சுமார் ரூ.30 லட்சம் வரை அவர்களுக்கு கொடுத்து ஏமாற்றம் அடைந்தார். இதுகுறித்து அவர் கடந்த மாதம் சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். போலீசார், 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து சிவராமன், ராணி ஆகியோரை கடந்த மாதம் கோவையில் வைத்து கைது செய்தனர். இந்த வழக்கில் ஜெயகுரு என்ற பெண்ணையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் மற்றவர்களை, வலைவீசி தேடி வருகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருநெல்வேலியில் நாளை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:54:01 AM (IST)

விசைத்தறிகளை நவீனமயமாக்கும் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 26, டிசம்பர் 2025 10:36:34 AM (IST)

பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்கு தண்டனை : போக்சோ நீதிமன்றம்அதிரடி தீர்ப்பு
வியாழன் 25, டிசம்பர் 2025 8:52:42 AM (IST)

தென்காசியில் மட்டும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் 300 வீரர்கள் ராணுவத்திற்கு தேர்வு..!!
புதன் 24, டிசம்பர் 2025 11:59:50 AM (IST)

பொருநை அருங்காட்சியகத்தினை பார்வையிட பொதுமக்கள் ஆர்வம்!
செவ்வாய் 23, டிசம்பர் 2025 5:10:11 PM (IST)

கால்நடைகளுக்கான தடுப்பூசி பணி டிசம்பர் 29-ஆம் தேதி தொடக்கம் - ஆட்சியர் தகவல்
செவ்வாய் 23, டிசம்பர் 2025 3:57:52 PM (IST)

