» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்துகள் தயாரிக்கும் நிகழ்வு!
சனி 22, நவம்பர் 2025 10:08:40 AM (IST)

இருதயகுளம், அமலி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்துகள் தயாரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பள்ளித் தலைமை ஆசிரியை அருள் சகோதரி சூ. அருள்மேரி தலைமை வகித்தார். பள்ளி மாணவிகள் 1600 பேர் ஒரே நாளில் ஒன்றரை லட்சம் விதைப் பந்துகள் தயாரித்து சாதனை படைத்தனர். வெங்கடாம்பட்டி சமூக ஆர்வலர் திருமாறன் கலந்து கொண்டு விதைப்பந்துகள் தயாரிப்பதன் அவசியம் குறித்து விளக்கிப்பேசினார்.
ஆசிரிய அருள் சகோதரிகள் ஜோசப் செல்வி, ஜான்சி, பிரசீலா, கிளாரா மேரி, மரிய மல்லிகா, ஜான்சி, ரீட்டா புஷ்பம், மற்றும் அருள் ராஜ துரைச்சி ஆகியோர் மாணவிகளுக்கு விதைப்பந்துகளை செய்து காட்டினர். விதைப்பந்து தயாரிப்பதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியை அருள் சகோதரி சூ. அருள் மேரி மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மரிய இனிகோ மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகள் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:57:24 PM (IST)

தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.1கோடி நலதிட்ட உதவிகள்: நலவாரிய தலைவர் வழங்கினார்
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:39:12 AM (IST)

ஒடிசாவிலிருந்து லாரியில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:32:34 AM (IST)

பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிப்பு : காவல் நிலையத்தின் அருகிலேயே கைவரிசை!
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:04:29 AM (IST)

மது போதையில் ஆட்டோ ஓட்டி 5 பள்ளி மாணவர்கள் காயம் : ஓட்டுநர் மீது கடும் பிரிவில் வழக்கு
புதன் 18, பிப்ரவரி 2026 5:53:22 PM (IST)

தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் மோதல்: 6 பேர் மீது வழக்குப்பதிவு; வீடியோ வைரல்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:26:34 PM (IST)

