» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
தூத்துக்குடியிலிருந்து நிலக்கரி ஏற்றி வந்த லாரி விபத்து: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு!
புதன் 10, டிசம்பர் 2025 7:42:11 AM (IST)

நெல்லை மாவட்டம், பணகுடி நான்கு வழிச்சாலையில், தூத்துக்குடியிலிருந்து நிலக்கரி ஏற்றி வந்த, லாரி விபத்துக்குள்ளானதில் மூன்று மணி நேரம் முற்றிலுமாக, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து, நிலக்கரி ஏற்றிக்கொண்டு, கேரள மாநிலம் கொல்லத்திற்கு லாரி ஒன்று சென்று, நேற்று (டிசம்பர்.9) அதிகாலையில், கொண்டிருந்தது. அப்போது திருநெல்வேலி- கன்னியாகுமரி தேசிய, நான்குவழி நெடுஞ்சாலையில், பணகுடி அருகே இந்த லாரி வரும்போது, திடீரென ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது, பயங்கர சத்தத்துடன் மோதியது.
இதில், மோதிய லாரியின் முன்பக்க சக்கரங்கள் கழன்று தேசிய நான்கு வழிச்சாலையில், உருண்டோடியது. அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் சிறுசிறு காயங்களுடன், உயிர் தப்பினார். விபத்தை நேரில் பார்த்த, நான்கு வழிச்சாலை காப்பாளர்கள் ஓடி வந்து, சிறிய வகை ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன், நிலக்கரியை மற்றொரு லாரிக்கு மாற்றினர். இந்த சம்பவத்தால், திருநெல்வேலி- கன்னியாகுமரி தேசிய, நான்குவழி நெடுஞ்சாலையில் போக்குவரத்து, தொடர்ந்து 3 மணிநேரம் கடுமையாக, பாதிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையப்பர் கோவிலில் நடிகர் தனுஷ் சுவாமி தரிசனம்!
புதன் 10, டிசம்பர் 2025 4:45:40 PM (IST)

அரசு ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளை: கதவை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை!
புதன் 10, டிசம்பர் 2025 8:42:41 AM (IST)

நெல்லை அருகே பைக் விபத்தில் கல்லூரி மாணவி பலி - உறவினர் படுகாயம்!
புதன் 10, டிசம்பர் 2025 8:24:47 AM (IST)

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம்: டிச.20ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:07:19 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள்: டிச.23க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 4:00:22 PM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் கொடிநாள் வசூல்: ஆட்சியர் இரா.சுகுமார் தொடங்கி வைத்தார்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 3:46:25 PM (IST)


