» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
நெல்லையில் 11 இடங்களில் சோதனைச்சாவடி: எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர வாகன சோதனை!
புதன் 11, மார்ச் 2026 8:40:02 AM (IST)

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நெல்லை மாநகரப் பகுதியில் 11 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, எல்லை பாதுகாப்பு படையினருடன் இணைந்து மாநகர போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், நெல்லை மாநகர காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மத்திய எல்லை பாதுகாப்புப் படையைச் (BSF) சேர்ந்த 80 வீரர்கள் அடங்கிய ஒரு கம்பெனி பிரிவினர் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக நெல்லை மாநகருக்கு வருகை தந்துள்ளனர். நேற்று காலை முதல் நெல்லை மாநகர போலீசாருடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புப் பணியைத் தொடங்கினர்.
நெல்லை டவுன், பாளையங்கோட்டை மார்க்கெட், கே.டி.சி. நகர், தச்சநல்லூர், வண்ணார்பேட்டை உள்ளிட்ட 11 முக்கிய நுழைவு வாயில் பகுதிகளில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சோதனைச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வாகன சோதனையின் போது, சட்டவிரோத ஆயுதங்கள், வெடிபொருட்கள், கணக்கில் வராத பணம், மதுபானங்கள் மற்றும் வாக்காளர்களுக்கு விநியோகிக்கக் கொண்டு செல்லப்படும் பரிசுப் பொருட்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்துத் தீவிரமாக ஆய்வு செய்யப்படுகிறது. சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் முழுமையாகச் சோதனை செய்யப்பட்ட பின்னரே மாநகரப் பகுதிக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த தென்காசி தனியார் கல்லூரி தாளாளர் கைது!
வியாழன் 30, ஜூலை 2026 12:30:12 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழக நெல்லை மண்டலப் பொது மேலாளராக மோகன் குமார் பொறுப்பேற்பு!
வியாழன் 30, ஜூலை 2026 11:10:30 AM (IST)

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
வியாழன் 30, ஜூலை 2026 8:30:49 AM (IST)

இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இரத்த தானம் செய்ய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
புதன் 29, ஜூலை 2026 12:47:15 PM (IST)

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 29, ஜூலை 2026 8:32:40 AM (IST)

நெல்லை பட்டமளிப்பு விழாவில் மாணவிகள் கண்ணீர் : இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்!
செவ்வாய் 28, ஜூலை 2026 3:52:31 PM (IST)


