» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காவல்துறையில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம்? ஷியாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:14:37 PM (IST)

காவல்துறையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதாக புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஷியாம் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.
நாங்குநேரி அருகே பெரும்பத்தில் கடந்த 2-ஆம் தேதி இரவு 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய தாக்குதலில், மாற்றுத்திறனாளி ஜான் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த ஜானின் குடும்பத்தினரை புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஷியாம் கிருஷ்ணசாமி இன்று நேரில் சந்தித்து தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலின் போது அரிவாள் வெட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பிரபாகரன் மற்றும் ராமசாமி ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசினார். அப்போது, அன்று இரவு நடந்த சம்பவங்கள் குறித்து அவர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஷியாம் கிருஷ்ணசாமி தெரிவித்ததாவது: காவல்துறையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இத்தகைய பாரபட்சமான செயல்பாடுகளே இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடரக் காரணமாக அமைகின்றன. அஜித்குமார் மற்றும் ஆகாஷ் ஆகியோரின் மரணங்கள் இதற்குச் சான்றாகும்.
கடந்த 4 ஆண்டுகளாகப் பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாங்குநேரி சம்பவம் தமிழக அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்தும் முதலமைச்சர் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் நிவாரணம் வழங்கவும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் முதல் பெண் தாய்சேய் ஊர்தி வாகன ஓட்டுநர் சேவை: ஆட்சியர் தொடங்கி வைத்தார்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:47:16 PM (IST)

நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா முன்னேற்பாடுகள் : ஆட்சியர் ஆலோசனை!
வெள்ளி 12, ஜூன் 2026 10:41:23 AM (IST)

லாரி ஓட்டுநர் தலை துண்டித்துக் படுகொலை : உறவினர்கள் போராட்டம்; போலீஸ் குவிப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:19:43 AM (IST)

ஐந்தருவி, பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை: சிற்றருவி, புலியருவியில் உற்சாக குளியல்!
வியாழன் 11, ஜூன் 2026 11:21:31 AM (IST)

மும்பை தாதர் - சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரயில் செங்கோட்டை வரை நீட்டிப்பு : பயணிகள் கோரிக்கை!
வியாழன் 11, ஜூன் 2026 10:11:04 AM (IST)

திருநெல்வேலி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் : ஆட்சியர் ஆனந்த் மோகன் நேரில் ஆய்வு!
புதன் 10, ஜூன் 2026 4:58:52 PM (IST)


