» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காவல்துறையில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம்? ஷியாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:14:37 PM (IST)

காவல்துறையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதாக புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஷியாம் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.
நாங்குநேரி அருகே பெரும்பத்தில் கடந்த 2-ஆம் தேதி இரவு 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய தாக்குதலில், மாற்றுத்திறனாளி ஜான் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த ஜானின் குடும்பத்தினரை புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஷியாம் கிருஷ்ணசாமி இன்று நேரில் சந்தித்து தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலின் போது அரிவாள் வெட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பிரபாகரன் மற்றும் ராமசாமி ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசினார். அப்போது, அன்று இரவு நடந்த சம்பவங்கள் குறித்து அவர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஷியாம் கிருஷ்ணசாமி தெரிவித்ததாவது: காவல்துறையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இத்தகைய பாரபட்சமான செயல்பாடுகளே இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடரக் காரணமாக அமைகின்றன. அஜித்குமார் மற்றும் ஆகாஷ் ஆகியோரின் மரணங்கள் இதற்குச் சான்றாகும்.
கடந்த 4 ஆண்டுகளாகப் பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாங்குநேரி சம்பவம் தமிழக அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்தும் முதலமைச்சர் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் நிவாரணம் வழங்கவும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமறைவாக இருந்த தென்காசி தனியார் கல்லூரி தாளாளர் கைது!
வியாழன் 30, ஜூலை 2026 12:30:12 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழக நெல்லை மண்டலப் பொது மேலாளராக மோகன் குமார் பொறுப்பேற்பு!
வியாழன் 30, ஜூலை 2026 11:10:30 AM (IST)

குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்!
வியாழன் 30, ஜூலை 2026 8:30:49 AM (IST)

இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து இரத்த தானம் செய்ய வேண்டும்: ஆட்சியர் வேண்டுகோள்
புதன் 29, ஜூலை 2026 12:47:15 PM (IST)

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 29, ஜூலை 2026 8:32:40 AM (IST)

நெல்லை பட்டமளிப்பு விழாவில் மாணவிகள் கண்ணீர் : இருகரம் கூப்பி மன்னிப்பு கேட்ட ஆளுநர் அர்லேகர்!
செவ்வாய் 28, ஜூலை 2026 3:52:31 PM (IST)


