» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
காவல்துறையில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம்? ஷியாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:14:37 PM (IST)

காவல்துறையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதாக புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஷியாம் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.
நாங்குநேரி அருகே பெரும்பத்தில் கடந்த 2-ஆம் தேதி இரவு 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய தாக்குதலில், மாற்றுத்திறனாளி ஜான் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில், உயிரிழந்த ஜானின் குடும்பத்தினரை புதிய தமிழகம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஷியாம் கிருஷ்ணசாமி இன்று நேரில் சந்தித்து தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலின் போது அரிவாள் வெட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பிரபாகரன் மற்றும் ராமசாமி ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசினார். அப்போது, அன்று இரவு நடந்த சம்பவங்கள் குறித்து அவர்களிடம் விரிவாகக் கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஷியாம் கிருஷ்ணசாமி தெரிவித்ததாவது: காவல்துறையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இத்தகைய பாரபட்சமான செயல்பாடுகளே இது போன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடரக் காரணமாக அமைகின்றன. அஜித்குமார் மற்றும் ஆகாஷ் ஆகியோரின் மரணங்கள் இதற்குச் சான்றாகும்.
கடந்த 4 ஆண்டுகளாகப் பட்டியல் இன மக்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாங்குநேரி சம்பவம் தமிழக அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. இவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்தும் முதலமைச்சர் இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசின் சார்பில் நிவாரணம் வழங்கவும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தச்சநல்லூரில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 8:30:07 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 77.37% வாக்குப்பதிவு: வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:12:45 PM (IST)

சென்னை - நெல்லை இடையே சிறப்பு மெமு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:36:55 PM (IST)

இரட்டைக்கொலை விவகாரத்தில் புறக்கணிப்பு : வாக்களித்த இளம்பெண்ணால் பரபரப்பு!
வியாழன் 23, ஏப்ரல் 2026 4:34:18 PM (IST)

காலை 11 மணி நிலவரம்: திருநெல்வேலி மாவட்டத்தில் 32.95% வாக்குப்பதிவு – அம்பை முதலிடம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 12:36:38 PM (IST)

கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் உட்பட 12 மாற்று ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்!
புதன் 22, ஏப்ரல் 2026 12:38:00 PM (IST)

