» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

சிவன் கோவில்களில் நாளை மகா சிவராத்திரி விழா: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் நெல்லையப்பர் கோவில்!

சனி 14, பிப்ரவரி 2026 8:09:54 AM (IST)



நாளை மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் நாளை இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நான்கு கால பூஜைகள் நடைபெறவுள்ளன. விழாக்கோலத்தை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சுவாமி சன்னதி மற்றும் அம்பாள் சன்னதி வளாகங்களில் பரதநாட்டியம், தேவாரம், வீணை இசை மற்றும் பக்தி இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

திருச்செந்தூர்: சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான ஆனந்தவல்லி அம்பாள் சமேத சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன. பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோவிலில் 4 கால பூஜைகளுடன் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தச்சநல்லூர் நெல்லையப்பர், சந்திப்பு கைலாசநாதர், டவுன் தொண்டர்கள் நயினார் கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அறங்காவலர்கள் இதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory