» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
சுகாதாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.8 லட்சம் மோசடி: 2 பெண்கள் கைது!
சனி 14, பிப்ரவரி 2026 8:19:00 AM (IST)
நெல்லையில் சுகாதாரத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி வாலிபர் ஒருவரிடம் ரூ.8 லட்சம் மோசடி செய்த இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
நெல்லையைச் சேர்ந்த அஜித் குமார் (27) என்பவரிடம், சிவகங்கையைச் சேர்ந்த ராஜலட்சுமி (43) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த சரோஜினி (28) ஆகிய இருவரும் தங்களை அதிகாரிகளாகக் காட்டிப் பழகியுள்ளனர். நெல்லை சுகாதாரத் துறையில் ஆய்வாளர் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவரிடமிருந்து ரூ.8 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு போலி பணி நியமன ஆணையையும் வழங்கியுள்ளனர்.
இது குறித்து அஜித் குமார் அளித்த புகாரின் பேரில், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் மோசடி உறுதியானதைத் தொடர்ந்து, சரோஜினி மற்றும் ராஜலட்சுமி ஆகிய இருவரையும் போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள்: பெண்கள் விண்ணபிக்கலாம் - ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 26, மே 2026 3:53:11 PM (IST)

விடுதி தோழிகளை செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து காதலனுக்கு அனுப்பிய பெண் கைது!
செவ்வாய் 26, மே 2026 9:12:05 AM (IST)

முதலமைச்சர் விஜய் குறித்து ஆபாசப் பேச்சு: வீடியோ வெளியிட்ட மென்பொருள் பொறியாளர் கைது!
செவ்வாய் 26, மே 2026 9:04:35 AM (IST)

தென்காசியில் அமைச்சர் டி.கே.பிரபு திடீர் ஆய்வு: 18 கற்குவாரிகளை மூட அதிரடி உத்தரவு!
திங்கள் 25, மே 2026 5:37:59 PM (IST)

இந்தியாவில் முதன்முறையாக டிஜிட்டல் சென்சஸ் : நெல்லையில் பயிற்சி தொடக்கம்!
திங்கள் 25, மே 2026 12:54:24 PM (IST)

நெல்லையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை : கள்ளக்காதலனுடன் தாய் கைது!
ஞாயிறு 24, மே 2026 8:46:25 PM (IST)


