» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
பழுதான கைப்பேசி விற்பனை: ரூ.48,000 நஷ்டஈடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு!
சனி 21, பிப்ரவரி 2026 8:38:09 AM (IST)
கைப்பேசி விற்பனையில் ஏற்பட்ட சேவைக் குறைபாடு காரணமாக, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.48,000 நஷ்டஈடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.
தூத்துக்குடியைச் சேர்ந்த பிரியதர்ஷினி என்பவர், உள்ளூர் கைப்பேசிக் கடை ஒன்றில் ரூ. 28,000 மதிப்பிலான கைப்பேசி ஒன்றை வாங்கினார். வாங்கிய சில நாட்களிலேயே அந்த கைப்பேசி பழுதானது. இது குறித்து கடைக்காரரிடம் கேட்டபோது, அவர் முறையான பதில் அளிக்காமல் சேவை மையத்தை அணுகுமாறு கூறியுள்ளார். சேவை மையத்தில் சரி செய்யப்பட்ட பின்பும், மீண்டும் அதே பழுது ஏற்பட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான பிரியதர்ஷினி, நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஆணையத் தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் ஆ. சங்கர் மற்றும் நமச்சிவாயம் ஆகியோர் அடங்கிய அமர்வு, கைப்பேசியின் அசல் விலை ரூ. 28,000, மன உளைச்சலுக்கான நஷ்டஈடு ரூ.10,000, வழக்கு செலவுத் தொகை ரூ. 10,000 ஆக மொத்தம் ரூ.48,000 தொகையை சம்பந்தப்பட்ட கடைக்காரர் வழங்க வேண்டும். தவறினால், இத்தொகைக்கு ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:57:24 PM (IST)

தூய்மைப்பணியாளர்களுக்கு ரூ.1கோடி நலதிட்ட உதவிகள்: நலவாரிய தலைவர் வழங்கினார்
வியாழன் 19, பிப்ரவரி 2026 10:39:12 AM (IST)

ஒடிசாவிலிருந்து லாரியில் கடத்திய 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பேர் கைது
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:32:34 AM (IST)

பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிப்பு : காவல் நிலையத்தின் அருகிலேயே கைவரிசை!
வியாழன் 19, பிப்ரவரி 2026 8:04:29 AM (IST)

மது போதையில் ஆட்டோ ஓட்டி 5 பள்ளி மாணவர்கள் காயம் : ஓட்டுநர் மீது கடும் பிரிவில் வழக்கு
புதன் 18, பிப்ரவரி 2026 5:53:22 PM (IST)

தேவாலய நுழைவுவாயில் கட்டுவதில் மோதல்: 6 பேர் மீது வழக்குப்பதிவு; வீடியோ வைரல்!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:26:34 PM (IST)


செய்தி வாசிப்பவன்Feb 21, 2026 - 09:57:27 AM | Posted IP 104.2*****