» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
மது பழக்கத்தை தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை: சூரங்குடி அருகே சோகம்
புதன் 25, பிப்ரவரி 2026 11:24:52 AM (IST)
சூரங்குடி அருகே மது அருந்துவதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம் மேல்மாந்தை நடுத்தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகன் தனஜெயம் (24). இவர் வேலை முடிந்து விட்டு தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் பழக்கம் கொண்டவர் எனக் கூறப்படுகிறது.
வழக்கம்போல நேற்று மது போதையில் வீட்டிற்கு வந்த தனஜெயத்தை, அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான தனஜெயம், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த சூரங்குடி காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜ், வழக்குப் பதிவு செய்து தனஜெயத்தின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் கல்லூரி பேருந்து மோதி விபத்து: பள்ளி மாணவி உயிரிழப்பு!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 11:47:09 AM (IST)

அய்யா வைகுண்டசாமி பிறந்த நாள்: மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!
செவ்வாய் 24, பிப்ரவரி 2026 11:20:38 AM (IST)

திருநெல்வேலி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் : நாடாளுமன்ற உறுப்பினர், ஆட்சியர் ஆய்வு
திங்கள் 23, பிப்ரவரி 2026 4:43:19 PM (IST)

நெல்லை மாவட்டத்தில் 12,53,264 வாக்காளர்கள்; 10,635 பேர் நீக்கம்: இறுதி வாக்காளர் பட்டியல்!
திங்கள் 23, பிப்ரவரி 2026 12:39:15 PM (IST)

பணகுடி இராமலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திங்கள் 23, பிப்ரவரி 2026 12:14:04 PM (IST)

குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம்: ஆட்சியர் சுகுமார் தகவல்
வெள்ளி 20, பிப்ரவரி 2026 5:57:24 PM (IST)


தமிழன்Feb 25, 2026 - 03:46:36 PM | Posted IP 104.2*****