» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)
குடும்பத் தகராறால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை: தூத்துக்குடி அருகே சோகம்!
வியாழன் 12, மார்ச் 2026 8:16:14 AM (IST)
தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறால் மனமுடைந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி செந்தூர்கனி (66). இவர்களது மகன் ஜேசுராஜ். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜேசுராஜ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் கோபித்துக்கொண்ட ஜேசுராஜின் மனைவி, தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். மகன் மற்றும் மருமகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த தகராறால் மனவேதனையில் இருந்து வந்த செந்தூர்கனி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நெல்லையில் 3 சிறுமிகளுக்குப் பாலியல் வன்கொடுமை: போக்சோ குற்றவாளிக்குத் தூக்குத் தண்டனை!
வியாழன் 12, மார்ச் 2026 8:30:53 PM (IST)

சிறுமியை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் : வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை!
வியாழன் 12, மார்ச் 2026 3:28:28 PM (IST)

மண்டல தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியர் சுகுமார் தொடங்கி வைத்தார்
புதன் 11, மார்ச் 2026 4:56:24 PM (IST)

நெல்லையில் 11 இடங்களில் சோதனைச்சாவடி: எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர வாகன சோதனை!
புதன் 11, மார்ச் 2026 8:40:02 AM (IST)

துணை நடிகைக்கு காதல் தொல்லை கொடுத்த நெல்லை வாலிபர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது
செவ்வாய் 10, மார்ச் 2026 8:34:31 PM (IST)

காவல்துறையில் குறிப்பிட்ட சமூகத்தின் ஆதிக்கம்? ஷியாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!
செவ்வாய் 10, மார்ச் 2026 3:14:37 PM (IST)


தமிழன்Mar 12, 2026 - 04:13:38 PM | Posted IP 162.1*****