» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடியில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து!

ஞாயிறு 15, மார்ச் 2026 7:59:40 PM (IST)

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் தூத்துக்குடி மாவட்டத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற 23.04.2026 அன்று நடைபெறும் என இன்று (15.03.2026) அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் இருப்பதால், தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் நலத்திட்ட நிகழ்வுகள் தேர்தல் முடியும் வரை நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது: 

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கள் கிழமையும் நடைபெறும் வாராந்திர மனு விசாரணை கூட்டம், கிராமங்கள் தோறும் நடத்தப்படும் சிறப்பு முகாம்கள், உங்களைத் தேடி உங்கள் ஊரில் அரசு அதிகாரிகளின் கள ஆய்வு மற்றும் குறைதீர்ப்புத் திட்டம், இந்தத் திட்டங்கள் அனைத்தும் தேர்தல் நன்னடத்தை விதிகள் முடிவடையும் வரையில் நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் அறிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory