» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

காவல் நிலையம் அருகே ஒருவர் அடித்துக் கொலை - மதுபோதையில் நண்பர் வெறிச்செயல்!

சனி 30, மே 2026 8:33:56 AM (IST)

நாசரேத் காவல் நிலையம் அருகே, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிடத் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த நண்பரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள வகுத்தான்குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ராஜா (41). இவரும், நாசரேத் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் பாஸ்கர் (37) என்பவரும் நெருங்கிய நண்பர்கள். கட்டிடத் தொழிலாளிகளான இவர்கள் இருவருமே ஒன்றாக வேலைக்குச் சென்று வந்துள்ளனர். இவர்களுக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் நாசரேத் காவல் நிலையம் அருகே உள்ள ஒரு பகுதியில் இருவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது மதுபோதை தலைக்கேறிய நிலையில், இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியுள்ளது.

ஆத்திரமடைந்த இருவரும் ஒருவரையொருவர் கைகளால் தாக்கி மோதிக்கொண்டனர். இதில் உச்சக்கட்ட கோபமடைந்த பாஸ்கர், அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து ராஜாவை சரமாரியாகத் தாக்கினார். இதில் தலையில் பலத்த காயமடைந்த ராஜா, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பாஸ்கர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இக்கொலைச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உயிரிழந்த ராஜாவின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து நாசரேத் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி, தப்பியோடிய பாஸ்கரை சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர். நாசரேத் காவல் நிலையம் அருகிலேயே குடிபோதையில் கட்டிடத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து

தமிழன்மே 30, 2026 - 08:43:12 AM | Posted IP 172.7*****

திராவிட ஆட்சியில் திறந்து விடப்பட்ட மதுக்கடைகளை அடித்து நொறுக்கி விடணும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory