» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

தூத்துக்குடி - நரசப்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!

வெள்ளி 21, ஆகஸ்ட் 2026 3:48:52 PM (IST)

tutyRAilwaystation.jpg

பயணிகளின் கூடுதல் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, தூத்துக்குடியில் இருந்து ஆந்திர மாநிலம் நரசப்பூருக்குச் சென்னை எழும்பூர் வழியாகச் சிறப்பு ரயில்கள் செப்டம்பரில் இயக்கப்படவுள்ளதாகத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தூத்துக்குடி - நரசப்பூர் (வண்டி எண்: 06019): தூத்துக்குடியில் இருந்து செப்டம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு, 3-வது நாள் நள்ளிரவு 12.20 மணிக்கு நரசப்பூரைச் சென்றடையும்.

நரசப்பூர் - தூத்துக்குடி (வண்டி எண்: 06020): மறுமார்க்கத்தில், நரசப்பூரில் இருந்து செப்டம்பர் 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைகளில்) காலை 4.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4.30 மணிக்கு தூத்துக்குடியை வந்தடையும்.

மொத்தம் 18 பெட்டிகளைக் கொண்ட இந்தச் சிறப்பு ரயில் தமிழகத்தில் மேலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்), விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்:

இச்சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை (ஆகஸ்ட் 22, சனிக்கிழமை) காலை 8.00 மணி முதல் தொடங்குகிறது.


மக்கள் கருத்து

BabuAug 22, 2026 - 06:26:37 PM | Posted IP 104.2*****

normala 23 coach apuram 21 aki 18 la vanthu nikuthu pola

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory