» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)

கடைகளில் குழந்தைகள் வேலை செய்தால் கடும் நடவடிக்கை: தூத்துக்குடி ஆட்சியர் எச்சரிக்கை!

சனி 22, ஆகஸ்ட் 2026 5:51:09 PM (IST)

LabourMeetcolle.jpg

கடைகள், வணிக நிறுவனங்களில் பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவ, மாணவிகள் யாரேனும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டால் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் விஷு மகாஜன் உத்தரவிட்டார். 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தொழிலாளர் நலத்துறை (அமலாக்கம்) சார்பில் மாவட்டக் குழந்தைகள் தொழிலாளர் தடுப்புப் படை மற்றும் கொத்தடிமைத் தொழிலாளர் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் இன்று நடைபெற்றது.

குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர்களை மீட்கும் பொருட்டுத் தொழிலாளர் துறையினரும், மாவட்டக் குழந்தைகள் தொழிலாளர் தடுப்புப் படையினரும் இணைந்து மேற்கொண்ட சிறப்பாய்வுகள் மற்றும் மீட்கப்பட்ட குழந்தைகள் விவரங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

கண்காணிப்புக் குழு உறுப்பினர்களுடன் இணைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மற்றும் மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

கடைகள் மற்றும் இதர வணிக நிறுவனங்களில் பள்ளியிலிருந்து இடைநின்ற மாணவ, மாணவிகள் யாரேனும் வேலையில் ஈடுபடுத்தப்பட்டால் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் மீண்டும் பள்ளிக்குச் சென்று கல்வியைத் தொடரத் தேவையான வழிகாட்டுதல்களைச் செய்ய வேண்டும் என்றும் அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மூ. குருச்சந்திரன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவசுந்தரி மற்றும் பல்வேறு அரசுத் துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

SivasriAug 22, 2026 - 06:55:35 PM | Posted IP 104.2*****

குழந்தைகள் வளரிளம் பருவம் பெண்கள் பள்ளி இடைநிற்றல் காரணம் குழந்தை தொழிலாளர் ஆகுவதே.தற்சமயம் 10வது முடித்து விட்டு தேர்ச்சி பெற்று தூத்துக்குடி பிரபல ஜவுளி விற்பனை செய்து வருகிறார் கேட்டால் ₹12000சம்பளம் வேன் எடுத்து வந்து அவர்களே ஊருக்குள் கொண்டு விடுவதால் படிப்பை நிறுத்துகிறார்கள்.நான் கூறுவது பெரிய பெரிய கடை ஓனர்களை ஆட்சியர் அழைத்து தூத்துக்குடி உள்ள வறுமை நிலையில் உள்ள பிள்ளைகளை தத்து எடுத்து படிக்க வைத்தால் labour ஆக வாய்ப்பு இல்லை.இவற்றில் வடபாகம் தென் பாகம் மத்திய பாகம் கடைச்சங்க யாக பிரித்து கடை ஓனர்களை மாவட்ட ஆட்சியர் ஐயா பேசவேண்டும்.இவற்றில் எந்த பகுதி வெற்றி கிட்டுது என்று இவர்களுக்கு அரசு பொது நிகழ்ச்சிகளில் கௌரவித்தது Award கொடுத்தால் இது புதிய யுகமாக Dropout children இல்லாமல் கடைகளுக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory