» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
நீர் மோர் பந்தலுக்கு அனுமதி வழங்குவதில் அரசியல் கூடாது: போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு
சனி 10, மே 2025 11:14:45 AM (IST)
நீர்மோர் பந்தலுக்கு அனுமதி வழங்குவதில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அரசியல் செய்யக் கூடாது என்று போலீசாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி மறுத்து, கூடல்புதூர் போலீசார் நோட்டீஸ் ஒட்டினர். பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறின்றி அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தல் தொடர்ந்து செயல்பட அனுமதி வழங்குமாறு உத்தரவிட வேண்டும்" என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் தண்டபாணி, சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: , தற்போது கடுமையான வெயில் காலம். மக்களின் நலன் கருதி ஒரு கட்சி சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தல் இருப்பதால் போலீசாருக்கும், மாநகராட்சிக்கும் என்ன பிரச்சினை? எதற்காக நீர் மோர் பந்தலுக்கு அனுமதி மறுக்கப்பட்டது? நீர் மோர் பந்தல் அமைக்க காவல் துறை விதித்துள்ள நிபந்தனைகள் வியப்பாக உள்ளன.
இரண்டு தண்ணீர் பானை வைக்கும் அளவுக்கு மட்டுமே பந்தல் அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அது எவ்வாறு முடியும்? இந்த உத்தரவை பிறப்பித்த காவல் துறை அதிகாரி படித்தவரா? இரண்டு பானைகள் வைக்கும் அளவுக்கு எப்படி பந்தல் அமைக்க முடியும்? இந்த நிபந்தனைகள் ஏற்கத்தக்கது அல்ல.
காவல் துறையினர் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அரசியல் செய்யாமல், தங்கள் கடமையை செய்ய வேண்டும். வெயில் காலத்தில் அனைத்து கட்சிகளும் நீர் மோர் பந்தல் அமைத்துள்ளன. ஆனால், மனுதாரர் கட்சிக்கு மட்டும் அனுமதி மறுத்ததை ஏற்க முடியாது. எனவே, அதிமுக தரப்பில் நீர் மோர் பந்தல் அமைக்க எவ்வித நிபந்தனையும் விதிக்காமல் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2000 பயனாளிகள் தேர்வு: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
சனி 10, மே 2025 4:31:37 PM (IST)

மகளிர் சுய உதவி குழுவினரின் மீன் உற்பத்தி பொருட்களை ஆட்சியர் ஆர்.அழகுமீனா ஆய்வு
சனி 10, மே 2025 4:02:48 PM (IST)

தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
சனி 10, மே 2025 12:30:31 PM (IST)

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
சனி 10, மே 2025 12:06:40 PM (IST)

பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கு சேவை மையங்களை அணுகி விண்ணப்பிக்கலாம்: மாணவர்களுக்கு அழைப்பு!
சனி 10, மே 2025 10:57:29 AM (IST)

நாகர்கோவில் - ஷாலிமார் ரயிலை தாம்பரம் வரை நீட்டித்து ஒரே எண்ணில் இயக்க கோரிக்கை
சனி 10, மே 2025 10:44:08 AM (IST)
